Wednesday, December 25, 2013

“நான் டிக்கெட் எடுக்கத் தேவையில்லை’

ஒரு பஸ் கண்டக்டர் இருந்தார்.. தினமும் அவருக்கு ஒரே ரூட் தான்.

ஒரு நாள் வழக்கமான பாதையில் பஸ் பயணித்துக் கொண்டிருந்தது.

நிறுத்தங்களில் நிறுத்தி பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்றது.. ஒரு நிறுத்தத்தில் முரட்டுத்தனமான மனிதன் ஒருவன் ஏறினான். பெரிய மீசையும் தடித்த உருவமுமாய் இருந்தவனைப் பார்த்த எல்லோரு க்குமே கொஞ்சம் அச்சமாய் தான் இருந்தது.

கண்டக்டர் அவனிடம் சென்று, “டிக்கெட்’ என்று கேட்டார். அவன் உடனே, “எனக்கு டிக்கெட் வேண்டாம்’ என்று சொல்லி சட்டென்று முகத்தை ஜன்னல் பக்கம் திருப்பிக் கொண்டான்.

“ஏன் டிக்கெட் வேண்டாம்’ என்று கேட்க கண்டக்டருக்கு பயம், தள்ளி வந்து விட்டார்.

மறுநாளும் இதே கதை. “எனக்கு டிக்கெட் வேண்டாம்’ என்று முறைத்தக் கொண்டோ சொல்லக் கண்டக்டர் வந்து விட்டார். இப்படியே ஒரு வாரம் கழிந்தது..

கண்டக்டருக்கு எரிச்சல் அதிகரித்தக் கொண்டே இருந்தது.. இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று எண்ணினார்.

அவன் பலசாலியாக இருப்பதால் தானே பயமாக இருக்கிறது, நாமும் பலசாலியாவோம் என்று எண்ணி உடற்பயிற்சிகள் செய்யத் துவங்கினார்..

தற்காப்பு கலை வகுப்புகளுக்குப் போனார், ஆறு மாதங்கள் இப்படியே போனது.

கண்டக்டரின் உடல் வலுவானது.. பயம் கொஞ்சம் போனது. இன்று அந்த தடியனிடம் டிக்கெட் ஏன் எடுப்பதில்லை என்று கேட்டு விட வேண்டும் என்று பஸ்ஸில் ஏறினார்.

இரண்டு ஸ்டாப்புகள் கழித்து அவன் ஏறினான். கண்டக்டர் டிக்கெட் கேட்க அவன் வழக்கம் போல், “நான் டிக்கெட் எடுக்கத் தேவையில்லை’ என்று சொல்லி தலையைத் திருப்பிக் கொண்டான்.

கண்டக்டர் தன் தைரியத்தையெல்லாம் வர வழைத்துக் கொண்டு “ஏன் தேவையில்லை?’ என்று விறைப்பாய் கேட்டார்.

அதற்கு அவன் சொன்ன பதில், “நான் பஸ் பாஸ் வைத்திருக்கிறேன்’.’

ஒரு பழமொழி:
பிரச்னைகளை ஆராயாமல் பயப்படக் கூடாது!

செத்தாண்டா சேகரு!!!!!!!!!!!

கணவனோட பிறந்தநாள் அன்று மனைவியை அழைத்துக்கொண்டு அவன் தியேட்டருக்கு படம் பார்க்க போனான்..அதுவும் "மூன்றாம் உலகம்".. என்ற நச் படத்துக்கு.. 
.
"..ஹே ஜானி..!! என்ன மேன்.!! இன்னிக்கு சூப்பரா ட்ரெஸ் பண்ணி இருக்கே.!!! என்ன விஷேசம்..!!" என்றார் வாசலில் டிக்கட் குடுப்பவர்..
.
"..அப்போ..!! நீங்க அடிக்கடி இங வர்ர ஆள் போல இருக்கே.!!".. என்று மனைவி சந்தேகத்தை ஸ்டார்ட் பண்ணினாள்.
.
"...ஐயையோ..!! இல்ல சுதா..!! அவன் என்கூட படிச்சவன்..!! இப்போ தியேட்டர்ல வேலை பாக்குறான் டா..! அவ்ளவுதான்..!".. என்று மனைவியை கூல் பண்ண பார்த்தான்..
.
"..அடடா..! வீணாக சந்தேக பட்டுடோமே"..ன்னு மனைவி சமாதானமாகி , அவருடன் உள்ளே சென்றாள்..
.
"..பாப்கார்ன் வாங்கிட்டு போகலாம்".. என்று முடிவுபண்ணி அவன் காண்டீனை நோக்கி சென்றான்..மனைவியும் கூட பின்னாலே போனாள்..
.
"..என்ன ஜானி..!! சில்லறை இல்லையா..!! எப்ப பாரு 500 ரூபா நோட்டா தந்து எங்களை சங்கட படுத்துறே..". என்று பாப்கார்ன் விற்பவன் சொன்னதும் மனைவிக்கு நட்டுகிட்டது.. கணவன் கொலைவெறியோடு காண்டீன் காரனை முறைத்துவிட்டு இடத்தை காலிசெய்தான்.
.
மனைவி கேட்பதற்கு முன்னாலேயெ அவனே முந்திக்கொண்டு.. "..அப்டி பார்க்காதே சுதா..!! எங்க ஆபீஸ்ல பியூனா வேலை பார்த்தான்னு சொன்னேன்ல..! அவந்தான் இப்பொ இஙக வேலை பார்க்கிறான்"....அப்பிடி இப்பிடின்னு சமாளிக்க பார்த்தான்..
.
மனைவிக்கு லைட்டா சந்தேகம் வர ஆரம்பித்தது..."..பியூன் எல்லாம் வாடா போடான்னு பழகுற அழவுக்கு உங்க ஃப்ரெண்ட்ஷிப் இருக்கு.".என்று முணுமுபுத்தபடி கோபத்தை வெளிக்காட்டிகொள்ளாமல் தியேட்டர் வாசலுக்கு சென்றாள்..
.
டிக்கட் கிழிப்பவன் ஏதாவது ஏழரையை போட்டுவிட கோட்டது என்று கொலை நடுக்கத்துடன் வாசலுக்கு சென்றான் கணவன்.
.
"..வழக்கமா படம் போட்ட அப்புறம் இருட்டுக்குள்ள தான் போவே..!! இன்னிக்கு என்ன சீக்கிரமே.. உனக்கு மச்சம்டா.. என வாசலில் டிக்கட் கிழிப்பவன் வில்லங்கத்தை ஆரம்பித்து வைத்தான்..
.
அவ்வளவுதான் மனைவிக்கு தாறுமாறாக ப்ரெஷர் எகிறி, டென்ஷன் ஆகி திடீரென தியேட்டரை விட்டு வெளியே ஓடினாள்..ஏழரை ஆரம்பித்துவிட்டதை உணர்ந்த கணவனும் அவளை துரத்தியபடி ஓடினான்..
.
வெளியே வந்த அவள், ஒரு ஆட்டோவை மறித்து அழுதபடி ஏறினாள்.. நிலைமை சீரியஸ் என்பதை உணர்ந்த கணவனும் பாய்ந்து ஆட்டோவுக்குள் ஏறினான்..
.
"..என்ன ஜானி சார்...! வழக்கமா நச்சு ஃபிகரை தள்ளிக்கிட்டு வருவிஙக..!! இன்னிக்கு என்ன சார்!! இந்த அட்டு ஃபிகர்தான் மாட்டிச்சா..!! போங்க சார்..!! வழக்கமா போற லாட்ஜ் தானே போவணும்.. என்றான் ஆட்டோக்காரன்..
.
மிச்சத்தை நீங்களே யோசிச்சுக்குங்கோ..!!!!

Saturday, December 21, 2013

அலர்ட் ஆறுமுகம்******

ஒரு மருத்துவ வகுப்பின் முதல் நாள் ஆசிரியர் ஒரு பிணத்தை வைத்து பாடம் நடத்த ஆரம்பித்தார்.

"ஒரு மருத்துவனுக்கு மிக முக்கியமானது மூன்று விஷயங்கள் ஒன்று நோயாளியின் உடலை தொடவோ, பார்க்கவோ கூச்சப்படக்கூடாது அடுத்தது எதையும் நன்றாக கவனிக்க வேண்டும்"
என்று சொல்லிவிட்டு தன் விரலை பிணத்தின் வாய்க்குள் விட்டு பின் வெளியே எடுத்து விரலை முத்தமிட்டார்.பிறகு மாணவர்களிடம்,"சரி எல்லோரும் நான் செய்தது போல செய்யுங்கள்" என்றார்.
மாணவர்கள் மிகவும் தயங்கினர் ஆனால் நேரம் ஆக ஆக எல்லோரும் செய்ய ஆரம்பித்தார்கள்.
ஒரு கட்டத்தில் எல்லோரும் செய்து முடித்திருக்க ஆசிரியர்,

"எல்லோரும் முடித்தாயிற்றா? நான் பிணத்தின் வாய்க்குள் விட்டது ஆள் காட்டி விரல், முத்தமிட்டது நடு விரல்....இனியாவது நன்றாக கவனியுங்கள்"

இதிலிருந்து நீங்கள் கற்கும் நீதி " எப்போவும் அலர்ட் ஆறுமுகமா இரு".

Sunday, December 15, 2013

காரை தொலைத்த மனைவியின் சோகக் கதை – சிரிக்க மட்டும்

காரை தொலைந்த கதைசிரிக்க சிந்திக்கநகைச்சுவை கதை
ஒரு பெண் தனக்கு நடந்த சோகக் கதையை இங்கே விவரிக்கிறாள்.. அவளுடன் சேர்ந்து நாமும் பயணிப்போம்..

carநான் எனது அலுவலக மீட்டிங்கை முடித்துக் கொண்டு வெளியே வந்தேன். வழக்கம் போல எனது பையில் கார் சாவியை தேடினேன். என்னால் ஆன மட்டும் பையின் அனைத்து மூலை முடுக்குகளையும் தேடிவிட்டேன்… இல்லைவே இல்லை என்று சொல்லிவிட்டன கை விரல்கள். அந்த விரல்களுக்கு கண்ணில்லை என்று நினைத்து பையை ஒரு முறை கண்களால் துளாவினேன். இல்லை கண்களும் அதே பதிலைத் தான் சொன்னது.

மூளையில் திடீரென ஒரு பல்ப் எரிந்தது… ஒரு வேளை காரிலேயே சாவியை விட்டு விட்டு வந்திருப்பேனோ.. (அய்யோ எத்தனையோ முறை காரில் சாவியை வைத்து விட்டு வறாதே என்று கணவர் திரட்டியுள்ளார். காரிலேயே சாவி இருந்தால் சாவி தொலையாது என்பது எனது நினைப்பு. ஆனால் காரே தொலைந்துவிடும் என்பது அவரது தரப்பு).. சரி இறுதியாக ஓடிச் சென்று பார்க்கிங்கில் தேடினேன்.. அய்யோ எனது கணவர் தரப்பு தான் சரி.. காரை காணவில்லை.. ஒரு நிமிடம் மூளையில் எரிந்து கொண்டிருந்த பல்ப் பளிச்சென்று எரிந்து வெடித்தது.

என்ன செய்வது என்று தெரியாமல், காவல்துறைக்கு போன் செய்து, என் பெயர், விலாசம், கார் எண், காரை பார்க் செய்த இடம், காணாமல் போன நேரம் எல்லாவற்றையும் விரிவாகக் கூறினேன். காவலரும் உடனடியாக நான் இருக்கும் இடத்துக்கு வருவதாகக் கூறினார்.

சற்று ஆஸ்வாசப்படுத்திக் கொண்டு எனது கணவருக்கு போன் செய்ய முடிவு செய்தேன். போனை எடுத்து கணவருக்கு ரிங் செய்தேன். எடுத்த வேகத்தில், என்னங்க கார் சாவியை காரிலேயே வைத்து விட்டு சென்றுவிட்டேன். வந்து பார்த்தால் காரைக் காணவில்லை என்று கொட்டினேன்.

சற்று நேர மௌனத்துக்குப் பிறகு இடியட் என்று மட்டும் காட்டமாக பதில் வந்தது.

நானே ஆரம்பித்து… மன்னிச்சிடுங்க.. என்ன வந்து அலுவலகத்தில் இருந்து கூட்டின் போறீங்களா என்று கேட்டேன்.

அதற்கு அவரிடம் இருந்து வந்த பதில் என்னை சுக்குநூறாக்கியது… “ஹேய்.. இன்று காலை நான் தான் உன்னை காரில் கொண்டு வந்து அலுவலகத்தில் விட்டுவிட்டு வீட்டுக்கு வந்தேன். இங்கு போலிஸ் காரர் உன் காரை திருடிவிட்டதாக என்னை பிடித்து வைத்துள்ளார்.. அவரிடம் உண்மையை விளக்கிவிட்டு உன் அலுவலகத்துக்கு வந்து உன்னை அழைத்துச் செல்கிறேன்” என்றாரே பார்க்கலாம்.

என்ன வட போச்சா…  

Thursday, December 12, 2013

நம்ம ஏன் இப்படி இருக்கிறோம்

கடவுள் ஒரு நாள் கழுதையை படைத்து அதனிடம் சொன்னார்,

"நீ ஒரு கழுதை. காலை முதல் மாலை வரைக்கும் நீ உழைக்க வேண்டும். உன் மேல் சுமைகள் இருக்கும். நீ புல் தான் சாப்பிட வேண்டும். உனக்கு அவ்வளவாக அறிவு இருக்காது. நீ 50 வருடங்களுக்கு வாழ்வாய்.

இதற்கு கழுதை சொன்னது
"நான் கழுதையாக இருக்கிறேன். ஆனா 50 வருடம் ரொம்ப அதிகம். எனக்கு 20 வருடம் போதும்."

கடவுள் கழுதையின் ஆசையை நிறைவேற்றினார்.

அடுத்து ஒரு நாயை படைத்து அதனிடம் சொன்னார்

"நீ மனிதனின் வீட்டைகாக்கும் காவலன். அவனுடைய அன்பு தோழனாக இருப்பாய். மனிதன் உண்ட பிறகு உனக்கு கொடுப்பான். நீ 30 வருடங்களுக்கு வாழ்வாய்."

இதற்கு நாய் கூறியது,
"கடவுளே, 30 வருஷம் ரொம்ப அதிகம். எனக்கு 15 வருஷம் போதும்"

கடவுள் நாயின் ஆசையை நிறைவேற்றினார்.

அடுத்து கடவுள் குரங்கை படைத்து அதனிடம் சொன்னார்

"நீ ஒரு குரங்கு. மரத்திற்கு மரம் தாவ வேண்டும். நீ வித்தைகள் காட்டி மற்றவர்களை மகிழ்விப்பாய். நீ 20 வருடங்களுக்கு வாழ்வாய்."

இதற்கு குரங்கு கூறியது "20 வருஷம் ரொம்ப அதிகம். 10 வருஷம் போதும்"

கடவுளும் குரங்கின்ஆசையை நிறைவேற்றினார்.

கடைசியாக மனிதனை படைத்து அவனிடம் சொன்னார் " நீ ஒரு மனிதன். உலகில் உள்ள ஆறு அறிவு ஜீவன் நீ மட்டுமே. உன் அறிவை கொண்டு மற்ற மிருகங்களை ஆட்சி செய்வாய். உலகமே உன்கையில். நீ 20 வருடங்களுக்கு வாழ்வாய்."

இதற்கு மனிதன் கூறினான் "20 வருஷம் ரொம்ப குறைவு.

கழுதை வேண்டாம் என்ற 30 வருடங்களையும், நாய் வேண்டாம் என்ற 15 வருடங்களையும், குரங்கு வேண்டாம் என்ற 10 வருடங்களையும் எனக்கு கொடுத்து விடு"

கடவுள் மனிதனின் ஆசையை நிறைவேற்றினான்.

அன்று முதல்
மனிதன் முதல் 20 வருடங்களை ஜாலியாக வாழ்கிறான் மனிதனாக.

கல்யாணம் செய்து கொண்டு அடுத்த 30 வருடங்களை கழுதை போல் எல்லாம் சுமைகளை தாங்கி கொண்டு, அல்லும் பகலும் உழைக்கிறான்.

குழந்தைகள் வளர்ந்தபிறகு, அடுத்த 15 வருடங்களுக்கு அவன் வீட்டின் நாயாக இருந்து, அனைவரையும் பாதுகாத்து கொள்கிறான். மிச்ச மீதி உள்ளதை சாப்பிடுகிறான்.

வயதாகி, Retire ஆன பிறகு குரங்கு போல் 10 வருடங்களுக்கு மகன் வீட்டிலிருந்து மகள் வீட்டிற்கும், மகள் வீட்டிலிருந்து மகன் வீட்டிற்கும் தாவி, தன் பேரகுழந்தைகளுக்­கு வித்தைகள் காட்டி மகிழ்விக்கிறான்...

இப்ப தெரியுதா நம்ம ஏன் இப்படி இருக்கிறோம்னு?

Wednesday, December 11, 2013

ரொம்ப நாள் சந்தேகம்............

ஒரு பையனுக்கு ரொம்ப நாளா சந்தேகம்.

முதல் மனுசன் எப்படி வந்தான்? அப்படின்னு.

அவன் அவனோட அப்பா கிட்டே போய், அப்பா, முதல் மனுசன் எப்படி தோணினான். அப்படின்னு கேட்டான்.

அதுக்கு அவர் சொல்றாரு, நாமெல்லாம் ஆதாம் ஏவாள் மூலமா உலகுக்கு வந்தவங்க. அப்படின்னு பதில் சொல்றார்.

இருந்தாலும் பையனுக்கு குழப்பம் இன்னும் தீரலை.
அவனோட அம்மா கிட்டே போய் கேட்குறான்.

அதுக்கு அவங்க சொல்றாங்க, நாமெல்லாம் குரங்கிலிருந்து வந்தவங்க அப்படின்னு.

இப்போ இன்னும் குழப்பமாயிடுச்சி பையனுக்கு. ரொம்ப யோசனையா உட்கார்ந்து இருக்கான்.

அதை பார்த்து அவங்க அப்பா, என்னடா சந்தேகம் இன்னும் தீரலையான்னு கேட்குறார்.

அந்த பையன் அவங்க அம்மா சொன்னதை சொல்றான்.

அப்பா உடனே சொல்றாரு, ரெண்டுமே கரெக்ட் தான்டா. நான் எங்க வம்சாவளியை சொன்னேன். உங்கம்மா அவ வம்சாவளியை சொல்லி இருக்கா அப்படின்னு.

பையன் இப்போ ரொம்ப தெளிவாயிட்டான்.

அப்பாவை
கேட்டான், என்னப்பா இன்னைக்கு சாப்பாடு உங்களுக்கு வெளியிலையா..


:D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D