Saturday, November 3, 2018

டெங்கு தோலுரிக்கும் கட்டுரை

இயற்கையின் அற்புதப் புதையல் கொண்ட அறிவு செறிந்த பதிவு இது. உலகில் உள்ள ஒவ்வொரு மனிதரும் இதை கட்டாயம் படிக்க வேண்டும்.*
*டெங்கு காய்ச்சலை பற்றி தெரிந்து கொள்வதற்கு முன் காய்ச்சல் என்றால் என்ன என்று பார்ப்போம்.*
*மனித உடல் பல லட்சம் கோடிக்கணக்கான செல்களால் கட்டமைக்கப்பட்டுள்ளது. 37.2 Trillion செல்கள் என சொல்லப்படுகிறது. ஒவ்வொறு செல்லும் உணவு அருந்தி, சக்தியை கொடுத்து, கழிவுகளை வெளியேற்றுகிறது.*
*இது தொடர்ந்து நடைபெற்று வரும், நமது தவறான உணவு மற்றும் வாழ்க்கைமுறை காரணமாக செல்களின் கழிவுகளை வெளியேற்றும் பணியில் சுணக்கம் ஏற்படுகிறது.*
*எனவே கழிவுகள் ஆங்காங்கே தேங்கிவிடுகிறது. சரி இப்பொழுது குழந்தைகளின் பால் புட்டியை எந்த தண்ணீரில் கழுவுவீர்கள் ? சுடு தண்ணீரில் தானே. ஏன் ? அழுக்குகள் நீங்கும், கிருமிகள் அழியும்.*
*சரி சிலர் தண்ணீரை கொதிக்க வைத்து குடிக்கிறார்கள். ஏன் ? கிருமிகள் அழியும். கொதிக்கவைத்து குடிப்பது தவறு தான் அதனுள் இப்பொழுது செல்ல வேண்டாம்.*
*தண்ணீரை சூடு செய்யும் போது அதில் சில பொருட்கள் நகர்வதை நீங்கள் பார்க்கலாம். சூடு ஆகும் போது நீரின் Molecules அனைத்தும் நகரத்துவங்கும்.*
*உணவுப் பொருட்களை சூடு செய்யும் போது அதில் இருந்து மணம் வெளிப்படுவதை நீங்கள் அறிவீர்கள். உணவில் உள்ள மணத்தை சூடு நகர்த்தி வெளி கொணர்ந்தது.*
*நமது நாட்டில் உள்ள பூக்களுக்கு மணம் உண்டு, காரணம் வெப்ப மண்டல நாடு. சூடு பூவின் மணத்தை நகர்த்தி வெளி கொணர்ந்தது.*
*ஊட்டி போன்ற குளிர் பிரதேச பகுதிகளில் உள்ள பூக்களுக்கு மணம் உண்டா ? என நீங்களே பரிசோதித்து பாருங்கள். பூ அழகாக இருக்கும் மணம் இருக்காது.*
*வயதான முதியவர் இறந்துவிட்டார் கையை தொட்டு பார்த்தால் ஐஸ் போல் உள்ளது. அசைவுகள் இல்லை. உயிருடன் இருந்த போது சூடு இருந்தது, அசைவு இருந்தது.*
*சூடாக இல்லாவிட்டால் இரத்தத்தில் வேகம் இல்லை என்ற பாடல் வரிகளையும் நினைவுப்படுத்துகிறேன். இது போல் இன்னும் பல உதாரணங்களை சொல்லிக்கொண்டே போகலாம்.*
*இதில் இருந்து என்ன தெரிகிறது. சூடு ஒரு பொருளை நகர்த்தும் என தெரிகிறது. சூடு இருந்தால் Movement இருக்கும் என தெரிகிறது. இது இயற்கை விதி. சூடு தான் சக்தி ( Energy ).*
*உடல் தனக்கு தேவையான பொருளை ஒரு போதும் வெளியேற்றாது. அதேப்போல் தனக்கு தேவை இல்லாத பொருளையும் உள்ளே வைத்திருக்காது.*
*இப்பொழுது நமது உடலில் கழிவுகள் தேங்கி உள்ளனவா. அதற்கு வருவோம். ஒரு பொருளை நகர்த்த என்ன வேண்டும் ? வெப்பம்.*
*சரி இப்பொழுது உடலில் கழிவுகள் அதிகம் தேங்கிவிட்டது. உடல் என்ன செய்யும் ? நீ எக்கேடோ கெட்டு நாசமாய் போ என விட்டுவிடுமா ? அல்ல.*
*உடல் நாம் உட்கொள்ளும் உணவில் உள்ள மாவுச்சத்தை (Glucose) அதிகம் எரித்து வெப்பத்தை உருவாக்கும். இந்த வெப்பம் என்ன செய்யும் ?*
*தேங்கி உள்ள கழிவுகளை நகர்த்தி நகர்த்தி இரத்த ஓட்டத்தில் கலக்கச்செய்யும். பின் இந்த கழிவுகள் அனைத்தும் தரம் பிரிக்கப்படும்.*
*எந்த எந்த கழிவுகளை எந்த வழியாக வெளியேற்றினால் உடலுக்கு தீங்கு நேராது என்று உடல் முடிவு செய்து அதன் வழியாக கழிவுகளை வெளியேற்றிவிடும்.*
*மூக்கின் வழி சளியாகவும்.*
*பெருங்குடலின் வழி திடக்கழிவாகவும்.*
*தோலின் வழி வியர்வையாகவும்.*
*சிறுநீர்பை வழி சிறுநீராகவும்.*
*உடல் பாதுகாப்பான முறையில் கழிவுகள் அனைத்தையும் வெளியேற்றி விடுகிறது.*
*இதைத்தான்னய்யா காய்ச்சல் என்கிறோம். நமது தவறான உணவு மற்றும் வாழ்க்கைமுறை காரணமாக தேங்கிய கழிவுகளை உடல் வெப்பத்தை உருவாக்கி வெளியேற்றும் செயலே காய்ச்சல்.*
*உலகிலேயே மிகச்சிறந்த நண்பன் யார் தெரியுமா ? உங்கள் உடல் தான். நீங்கள் அவனுக்கு கோடி முறை கெடுதல் செய்தாலும் கோடியை தாண்டி உங்களுக்கு நல்லது மட்டுமே செய்வானய்யா. கெடுதலை நினைக்க கூட அவனுக்கு தெரியாது.*
*அப்பேர்பட்ட இயற்கையின் அற்புதப்படைப்பான, இந்த உடல் வெப்பத்தை உண்டாக்கி கழிவுகளை வெளியேற்றும் போது பலர் என்ன செய்கிறார்கள் ?*
*அலோபதி சிகிச்சையில் ஊசி போட்டு மாத்திரை எடுக்கிறார்கள். இந்த ஆங்கில மருந்து என்ன செய்கிறது ? கழிவுகளை வெளியேற்ற உடல் சிரமப்பட்டு உருவாக்கிய வெப்பத்தை குறைத்து விடுகிறது.*
*முதல் முறையாக நீங்கள் செய்த கெடுதலால் உங்கள் நண்பனான உடல் கலங்குகிறான். அவன் தான் உங்கள் நண்பன் ஆயிற்றே விடுவானா. மீண்டும் வெப்பத்தை உருவாக்க முயற்சிப்பான். தொடர்ந்து நீங்கள் ஆங்கில சிகிச்சை எடுத்து. வெப்பத்தை குறைத்து விடுவீர்கள்.*
*வெப்பம் குறைந்ததால் Movement இருக்காது. Movement இல்லாததால் கழிவுகள் வெளியேறாமல் உடலிலேயே தங்கிவிடுகிறது. மீண்டும் மீண்டும் காய்ச்சலை ஏற்படுத்தி கழிவுகளை வெளியேற்ற முயற்சிப்பான்.*
*நீங்களும் தொடர்ந்து ஆங்கில சிகிச்சை எடுத்து கழிவுகளை அடக்கி வைத்துவிடுவீர்கள். இப்படி தொடர்ந்து பல வருடங்களாக தேங்கிய கழிவுகள் பல்வேறு நோய்களாக உருவெடுக்கிறது.*
*பல நாடுகளில் காய்ச்சலுக்கு ஆங்கில மருத்துவர்கள் வைத்தியம் பார்ப்பதில்லை என உங்களுக்கு தெரியுமா ? காய்ச்சலுக்காக வைத்தியம் பார்க்க சென்றால் திட்டி அனுப்பி ஓய்வெடுக்கச் சொல்வார்கள்.*
*இங்கு உள்ள நிலமையோ தலைகீழ் சொல்லவே வேண்டாம். ரோட்டில் நடந்துச்செல்பவனை வழி மறித்து ஊசி போடும் நாடு இது.*
*உடல் தன்னுள் தேங்கிய கழிவுகளை வெளியேற்றும் செயலே காய்ச்சல். இந்த உடல் சுத்திகரிப்பு வேலை நடக்கும் போது அமைதியாக ஓய்வு எடுத்தாலே இரண்டு மூன்று நாட்களில் காய்ச்சல் தானாக சரியாகும்.*
*சரி இப்பொழுது டெங்கு டங்குங்கராங்களே அதற்கு வருவோம் வாங்க !*
*ஒரு இடத்தில் குப்பை உள்ளது, அங்கு என்ன இருக்கும் ? பூச்சி, புழுக்கள்.*
*நாய் அடிபட்டு ரோட்டில் இறந்துள்ளது. அதன் உடலில் என்ன இருக்கும் ? புழுக்கள்.*
*தானியங்களை காற்று கூட புகாத புட்டியில் அடைத்து வைத்துவிட்டோம். சிறிது நாள் கழித்து திறந்து பார்த்தால் அதில் என்ன இருக்கும் ? வண்டுகள், பூச்சிகள், புழுக்கள்.*
*குப்பை மற்றும் நாய் மீது இருந்த புழு பூச்சிகள் சிறிது நேரத்திற்கு முன்பு அங்கு இல்லை. இந்த புழு பூச்சிகள் எங்கிருந்து வந்தது ? பக்கத்து ஊரில் இருந்து பேருந்தில் ஏறி வந்ததா ?*
*காற்று கூட புகாத புட்டியில் அடைத்து வைக்கப்பட்ட தானியத்தில் புழு, வண்டுகள் எங்கிருந்து வந்தது ? சிந்தியுங்கள்.*
*"இயற்கை விதி என்னவென்றால் எங்கு உணவு உள்ளதோ, அங்கு உயிர்கள் படைக்கப்படும்."*
*புழு, பூச்சி, வண்டு எல்லாம் எங்கிருந்தும் வரவில்லை. அந்த இடத்திலேயே உற்பத்தி ஆனது என தெரிந்து கொண்டோம்.*
*ஒரு ஏக்கரில் வெண்டைக்காய் செடி பயிரிடப்பட்டுள்ளது. ஒரு செடியில் அதை உண்ணும் பூச்சி வந்து விட்டது. அந்த பூச்சி பக்கத்து செடியில் உட்கார்ந்து இது நமது உணவுதானா என முகர்ந்து பார்க்கும்.*
*அடுத்தடுத்த செடியில் பரிசோதித்து. தனது உணவு தான் நிறைய உள்ளது என தெரிந்துகொண்ட உடனே தனது இனத்தை வேகமாக பெருக்க ஆரம்பித்துவிடும்.*
*ஒவ்வொரு உயிரினமும் தன்னை இப்பூவுலகில் நிலை நிறுத்திக்கொள்ள இறைவன் கொடுத்த அறிவு இது.*
*மனிதனும் அப்படித்தானே, எனது பொருளாதாரத்திற்கு இரண்டு குழந்தைகள் போதும் என நிறுத்திக்கொள்கிறானே.*
*அடுத்த இயற்கை விதி உணவின் அளவை பொருத்து உயிரினங்கள் பெருகும்.*
*இயற்கை விதி இரண்டு !*
*1 - உணவு உள்ள இடத்தில் உயிரினங்கள் படைக்கப்படும்.*
*2 - உணவின் அளவிற்கு ஏற்ப உயிரினங்கள் பெருகும்.*
*சரி, புழு பூச்சிகளுக்கு, அந்த குப்பை என்னவாகிறது ? உணவு.*
*புழுவிற்கு, நாய் என்னவாகிறது ? உணவு.*
*வண்டிற்கு, தானியம் என்னவாகிறது ? உணவு.*
*இந்த இயற்கை விதிகளை அப்படியே உடலுக்குள் பொருத்துங்கள்.*
*நமது தவறான உணவு மற்றும் வாழ்க்கைமுறை காரணமாக உடலில் கழிவுகள் தேங்குகிறது. இந்த கழிவுகள் கிருமிகள் என சொல்லப்படும் நுண்ணுயிர்களுக்கு உணவாகிறது.*
*"கழிவு, கிருமிகளுக்கு என்னவாகிறது ? உணவு."*
*கிருமிகளின் உணவாகிய கழிவுகளை நீங்கள் சேர்த்து வைத்ததால் அதை உண்டு அழிக்க கிருமிகள் அங்கு இயற்கையால் படைக்கப்பட்டு விட்டது. இப்பொழுது உணவு (கழிவு) உள்ள இடத்தில் உயிர்கள் (கிருமிகள்) படைக்கப்பட்டு விட்டதா ? ஆம்.*
*எப்படி வெண்டை செடியில் உள்ள பூச்சி, அதிக உணவை கண்டு தனது இனத்தை பெருக்கியதோ அதேப்போல், நுண்ணுயிர்கள் அதிக உணவை (கழிவு) கண்டு தனது இனத்தை பெருக்கும்.*
*இப்பொழுது நீங்கள் இரத்த பரிசோதனை செய்து பார்த்தால் கிருமிகளின் எண்ணிக்கை அதிகமாக காட்டும். அதுதான் அதிக உணவை கண்டு தனது இனத்தை பெருக்கிவிட்டதே.*
*உணவு இல்லை என்றால் மனிதன் என்ன ஆவான் ? இறந்து விடுவான் அல்லவா, அது போல் தான் உணவுகளாகிய கழிவுகள் தீர்ந்த பின் கிருமிகள் அழிந்துவிடும்.*
*நீங்கள் சேர்த்து வைத்து கழிவு, டெங்கு கிருமிக்கு பிடித்த உணவாக இருந்தால் டெங்கு காய்ச்சல்.*
*நீங்கள் சேர்த்து வைத்த கழிவு, சிக்கன் குனியா கிருமிக்கு பிடித்த உணவாக இருந்தால் சிக்கன் குனியா காய்ச்சல்.*
*நீங்கள் சேர்த்து வைத்த கழிவு, பன்றிக்காய்சல் கிருமிக்கு பிடித்த உணவாக இருந்தால் பன்றிக்காய்ச்சல்.*
*அவ்வளவுதாங்க.*
*அனைத்து காய்சலுக்கும் மூல காரணம் கழிவுகளின் தேக்கமே.*
*இயற்கை விதி எப்படி உள்ளும் வெளியும் பொருந்துகிறது என்று பாருங்கள்.*
*இதை தான்*
*அண்டத்தில் உள்ளதே பிண்டம்*
*பிண்டத்தில் உள்ளதே அண்டம்*
*அண்டமும் பிண்டமும் ஒன்று தான்*
*அறிந்து தான் பார்க்கும் போதே.*
*என்று சித்தர் பாடல் நமக்கு உணர்த்துகிறது.*
*இறப்புகள் நிகழ்வதற்கு காரணம் இரண்டு*
*1 - அலோபதி சிகிச்சை.*
*2 - ஊடகம் ஏற்படுத்திய பயம்.*
*அனைத்து குற்றமும் நம்முள்ளே வைத்துக்கொண்டு அப்பாவி கொசுவின் மீது பழி போடுகிறோமே. இத்துனூண்டு கொசுவை வைத்தும், கண்ணுக்கு தெரியாத கிருமியை வைத்தும் எத்தனை எத்தனை வியாபாரங்கள்.*
*கொசு விரட்டிகள் - பயன்படுத்தினால்* *நுரையீரல் நோய்கள் - Corporate Allopathy* *மருந்து வியாபாரம் - விளைவு சாவு*
*வீதிகளுக்கு கொசு மருந்துகள் - கொசுவை அழிக்கிறேன் என்ற பெயரில் பல்லுயிர் அழிப்பு - Collapse of Biodiversity - இயற்கை வழி விவசாயம் அழிவு - Corporate இரசாயன மருந்து வியாபாரம் - விளைவு மலடாய் போன மண்.*
*டெங்கு கொசு - டெங்கு காய்ச்சல் - Corporate Allopathy மருந்து வியாபாரம் - விளைவு சாவு. என நீண்டு கொண்டே போகிறது பட்டியல்.*
*கிருமிகள் - Water Filter System வியாபாரம் - இதனால் நோய் - Corporate Allopathy மருந்து வியாபாரம் - விளைவு சாவு.*
*கிருமிகள் - Soap ,Hand Wash, அந்த Wash இந்த Wash கண்ட கண்ட Wash - விளைவு சாவு.*
*கிருமிகள் - தடுப்பூசி, Vaccination - Corporate Allopathy Business - விளைவு சாவு.*
*கிருமி வியாபார பட்டியலுக்குள் சென்றால் நிச்சயம் இந்த பதிவு போதாது. இதனுடன் நிறைவு செய்யலாம்.*
*இவர்களின் நோக்கம். நாங்கள் சொல்வதை சாப்பிடு, நாங்கள் சொல்வதை படி, எங்களுக்கு வேலை செய், எங்கள் பொருட்களை பயன்படுத்து, எங்கள் மருத்துவம் பார், எங்களுக்கு சம்பாதித்து கொடுத்து விரைவில் செத்துப்போ என்பதே.*
*இந்த உலக வல்லாதிக்க தீய சக்தியை அழிக்க நன்மக்கள் நாம் அனைவரும் ஒன்று சேர வேண்டும்.*
*இவர்களின் கொட்டத்தை அடக்க ஒரே வழி, நமது முன்னோர்கள் நமக்கு அழகாய் வடிவமைத்துக் கொடுத்த அன்பும், அறமும், பண்பும் செரிந்த தற்சார்பு வாழ்க்கை முறைக்கு திரும்புவது மட்டுமே.*
*கழிவுகளை உடலில் தேக்கியது யார் குற்றம் ? டெங்கு வருவது வெளியில் உள்ள கொசுவால் அல்ல உங்கள் உடலில் உள்ள குப்பையால் தான் என இப்பொழுது தெரிகிறதா ? புரிகிறதா ?*
*உங்களுக்கு ஒரு உண்மை தெரியுமா யாருக்கு நோய் எதிர்பு சக்தி அதிகமாக உள்ளதோ அவர்களுக்குத்தான் காய்ச்சல் வரும். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால் காய்ச்சல் வர வாய்ப்பே இல்லை.*
*கொசுக்களினாலோ, கிருமிகளினாலோ நோய் வருவது உண்மையாக இருந்தால் என்றைக்கோ மனித இனம் உரு தெரியாமல் அழிந்து போயிருக்கும்.*
*உண்மை என்னவென்றால் கிருமிகள், பல்லுயிர்கள் உயிருடன் இருந்தால் தான் நாம் இந்த உலகில் உயிருடன் வாழ முடியும்.*
*பால் தயிராவது கிருமியால் தான்.*
*மாவு புளிப்பது கிருமியால் தான்.*
*சோறு நீராகாரமாவது கிருமியால் தான்.*
*பல பன்னாட்டு உணவுகள் பக்குவமடைவது கிருமியால் தான்.*
*குப்பை மட்குவது கிருமியால் தான்.*
*மண் வளமாவது கிருமியால் தான்.*
*உண்ட உணவு செரிப்பதே கிருமியால் தான்.*
*ஏன் முதன் முதலில் உயிர் உருவானதே இந்த கிருமியால் தான்.*
*உண்மை இப்படி இருக்க. கிருமியினால் நோய் வரும் என்பது அண்டப்புளுகு. Corporate Allopathy தனது வியாபாரத்தை பெருக்கவே இந்த புளுகு புளுகுகிறது.*
*உலக வல்லாதிக்க தீய சக்திகள் தனது மென்பொருள் ஏற்றப்பட்ட சுயமாக சிந்திக்கத் தெரியாத மருத்துவர்களை வைத்து அரசுகளை கைக்குள் போட்டுக்கொண்டு ஒன்றும் இல்லாத இந்த கொசுவை வைத்தும், கிருமிகளை வைத்தும் மிகப்பெரும் வியாபார வேட்டையில் ஈடுபடுவது மட்டும் அல்லாமல் மக்களையும் அழித்து வருகிறது.*
*நாம் நமது உடலை பற்றி தெரிந்துகொள்ளாவிட்டால் இப்படித்தான் தொடர்ந்து நமது தலையில் மிளகாய் அரைத்து அழிப்பார்கள்.*
*நாம் கற்க வேண்டிய முதல் கல்வி உடலை பற்றிய கல்வியாக இருக்க வேண்டும். பள்ளிகளில் இதை தனிப்பாடமாகவே கொண்டு வர வேண்டும்.*
*இயற்கையின் அற்புதப்படைப்பான இப்பூவுடலின் பேராற்றலை புரிந்து கொள்ளாமல், உலக வல்லாதிக்க தீய சக்திகளுக்கு நமது அறிவை பலி கொடுத்தது நம் குற்றமே.*
*அழிக்க வேண்டியது கொசுவையா ?*
*உங்களது தவறான உணவு மற்றும் வாழ்க்கை முறையையா ?*
*என நீங்களே முடிவு செய்யுங்கள்.*
*டெங்கு காய்ச்சலுக்கு தீர்வு !*
----------------------------------------------------
*நிலவேம்பு கசாயம்*
*தேவையான பொருட்கள்*
*1 - நிலவேம்பு பொடி - 1 தே.க*
*2 - பற்படாகம் - 1/2 தே.க*
*3 - விஷ்ணுகிரந்தை - 1/2 தே.க*
*4 - பூண்டு - 2 பல்*
*5 - சுக்கு - சிறிய துண்டு*
*6 - மிளகு - 1/2 தே.க*
*7 - திப்பிலி - 3nos*
*இவை அனைத்தையும் 250ml நீரில் கொதிக்க வைத்து 100ml ஆன பிறகு வடித்து காலை மாலை குடித்து வரவும்.*
*இதனுடன் பப்பாளி இலை சாறு இரண்டு வேலை, பீர்கன்காய் (தோல் விதையுடன்) தே.அ + எழுமிச்சை பழம் (தோலுடன், 8ல் 1 பங்கு) மிக்சியில் அரைத்து வடித்து சிறிது கல் உப்பு போட்டு 2 மணி நேரத்திற்கு ஒரு முறை குடித்து வந்தால் platelets அளவு எவ்வளவு குறைவாக இருந்தாலும் ஒரே நாளில் மடமடவென அதிகரிப்பதை நீங்களே பார்க்கலாம். அவ்வப்போது நாட்டு மாதுளை சாறும் கொடுக்கலாம்.*
*பசிக்காது. ஒரு வேலை பாதிக்கப்பட்ட நபர் பசி என கேட்டால் அரிசி வடித்த கஞ்சி தண்ணீர் கொடுக்கலாம். தாகம் என கேட்டால் சிறிதளவு பச்சை தண்ணீர் கொடுக்கலாம். அவ்வளவு தான் காய்ச்சல் தீரும் வரை வேறு எதுவும் கொடுக்கக்கூடாது.*
*இதே வழிமுறையை பன்றிக்காய்ச்சல், Typhoid போன்ற அனைத்து காய்ச்சலுக்கும் பின்பற்றலாம். விரைவில் உடல் தனது கழிவுகளை வெளியேற்றி குணமாகும்.*
*முக்கிய குறிப்பு : காய்ச்சல் இல்லாதவர்கள் ஒரு வேளை கூட இந்த நிலவேம்பு கசாயத்தை குடிக்கக்கூடாது. காய்ச்சல் இருப்பவர்கள் மட்டுமே குறிப்பிட்ட அளவு எடுக்க வேண்டும்.*
*நீங்களாக உண்ணா நோன்பு இருந்து செரிமான சக்திக்கும், இயக்க சக்திக்கும் ஓய்வு கொடுத்தால், உடல் அவ்வப்போது தனது கழிவுகளை வெளியேற்றி விடும். காய்ச்சல் வர வேண்டிய அவசியம் இல்லை.*
*இந்த பழக்கம் எல்லாம் இல்லை என்றால் உடலே செரிமான சக்தியையும், இயக்க சக்தியையும் துண்டித்து தங்களை படுக்க வைத்து செய்யும்.*

Tuesday, September 4, 2018

சீராக வாழ்வோம் : எண்ணம் ஆராய்தல் பயிற்சி

எண்ணம் ஆராய்தல் பயிற்சி
=========================

சீராக வாழ்வோம் :
---------------------------

தேவை, பழக்கம், சூழ்நிலை, பிறர் மனத்தூண்டல் மற்றும்
தேவையால் எழுந்ததொரு கருவமைப்பு, தெய்வீகம் என்ற ஆறும்
தேவைகளாம் எண்ணமாய் மலர்தல் கண்டு சிந்தித்துத்
தேவைகளை அளவுமுறை அறிந்து கொள்வோம்; சீராக வாழ்வோம்.
- வேதாத்திரி மகரிஷி

நம் மனதில் எண்ணங்கள் ஒன்றன்பின் ஒன்றாக உதித்துக்கொண்டே
இருக்கின்றன. இவை அனைத்தும் நல்லவைகளா என்று கவனித்தால்
இல்லை. தவறான எண்ணங்களும் அதிகமாகவே உதிக்கின்றன.
இங்கே நல்ல எண்ணங்கள் பற்றி சிந்திக்க ஒன்றும் இல்லை.
ஏனெனில் அவை அனைவருக்கும் நன்மை அளிக்கக் கூடியவை !

தவறான எண்ணங்கள் பற்றியே ஆராயவேண்டி உள்ளது. இவைகளை
அடக்க முடியவில்லையே என்று நினைக்கிறோம். எண்ணங்களை
அடக்க நினைத்தால் அடங்காது. அறியநினைத்தால் மட்டுமே,
எண்ணங்களை அடக்க முடியும். இந்த எண்ணங்கள் எங்கிருந்து
தோன்றுகின்றன. என்ன காரணத்தினால் தோன்றுகின்றன என
ஆராய வேண்டும். எண்ணங்கள் தோன்றும் இடம் மனம்.

அங்கே
நம் செயல்கள் அனைத்தும் பதிவாகி உள்ளன. இவைகளே
எண்ணங்களாக மலர்கின்றன. ஆம். எண்ணங்களின் தொகுப்பே
மனம். மனதின் எழுச்சிநிலையே எண்ணம். கடலும் அலையும்
போல. மனம் கடல் போலாகும். எண்ணம் அலை போலாகும்.

எண்ணங்கள் தோன்றும் காரணங்கள் ஆறு !
(1) தேவையால் எழும் எண்ணம்.
(2) பழக்கத்தால் எழும் எண்ணம்.
(3) சூழ்நிலையால் எழும் எண்ணம்.
(4) பிறர்மனத் தூண்டுதலால் எழும் எண்ணம்.
(5) கருமையம் அல்லது பாரம்பரியத்தால் எழும் எண்ணம்.
(6) தெய்வீக எண்ணம்.

இவைகளைத் தனித் தனியாக ஆராய்வோம் !

(1) தேவையால் எழும் எண்ணம் :
உடலில் உண்டாகும் துன்ப உணர்வுகளை போக்க எழும்
எண்ணம். பசி, தாகம், உடை, இருப்பிடம், வாழ்க்கைத்துணைப்
போன்றவை.

(2) பழக்கத்தால் எழும் எண்ணம் :
தினமும் காலையில் விழித்தவுடன் காபி குடிக்கவேண்டும்
என்று தோன்றுகிறது. இது ஏன்? பழக்கிவிட்டோம் மனத்தை.
இந்த பழக்கம்தான் இந்த எண்ணம் தோன்றக் காரணம்.

(3) சூழ்நிலையால் எழும் எண்ணம் :
சாலையில் சென்றுகொண்டிருக்கிறோம். கடைகளில் எத்தனையோ
பொருட்களை கட்டித் தொங்க விட்டிருக்கீறார்கள். சில பொருட்களை
பார்த்த உடன் வாங்கவேண்டும் என்று தோன்றுகிறது. வீட்டிலிருந்து
வெளியே கிளம்பும்போது அப்பொருளை வாங்கவேண்டும் என்று
எண்ணவில்லை. ஆனால் வாங்கிவிட்டோம். இதுவே சூழ்நிலையால் எழும் எண்ணம்.

(4) பிறர்மனத் தூண்டுதலால் எழும் எண்ணம் :
புகைப் பிடித்தல், மது அருந்துதல் போன்றவை. யாரும் விரும்பி
இந்தச் செயலை செய்வதில்லை. நண்பர்களின் தூண்டுதலே
இதற்குக் காரணம். இதுவே பிறர்மனத் தூண்டுதலால் எழும்
எண்ணம். சில நேரங்களில் நல்ல பழக்கங்களும் இக்காரணத்தால்
வர வாய்ப்புண்டு. மனவளக் கலை மன்றங்களுக்கு வரும்
அன்பர்கள் அனைவரும் பிறரால் அழைத்து வரப்பட்டவர்களே.

(5) கருமையம் அல்லது பாரம்பரியத்தால் எழும் எண்ணம் :
இரண்டு பெற்றோர்களுக்குள் சண்டை இருந்திருக்கலாம்.
அவர்கள் ஒருவரை ஒருவர் பழிவாங்க முயற்சி செய்திருக்கலாம்.
அவர்கள் ஆயுளுக்குள் அது முடியாமல் போயிருக்கலாம். இந்த
எண்ணம் அவர்கள் குழந்தைகளுக்கு வரும் வாய்ப்புண்டு.
அவர்களுடைய மகன்கள், எந்த காரணமும் இல்லாமலே
தங்களுக்குள் சண்டையிட்டுக்கொண்டு பழிவாங்கிக்
கொண்டிருக்கிறார்கள். இதுவே கருமையம் அல்லது
பாரம்பரியத்தால் எழும் எண்ணம். மற்றொரு உதாரணம் :
ஒருவர் தான் இருக்கும் ஊரில் ஒரு பள்ளிக்கூடம் கட்டலாம்
என்று நினைத்திருக்கலாம். ஆனால் அவரால், அவரது
ஆயுளுக்குள் முடியாமல் போயிருக்கலாம். இந்த எண்ணம்
அவரது மகனின் மனிதில் தோன்றி, அவர் அந்த பள்ளிக்கூடம்
கட்டியிருக்கலாம். பெற்றோரின் விருப்பம் மகனால் நிறைவேற்றப்பட்டது.

(6) தெய்வீக எண்ணம் :
யார் எந்த நற்காரியம் செய்தாலும் அது அவர்கள் மனதில்
தோன்றுவதற்கு காரணம் தெய்வீக எண்ணம்தான். இந்த தெய்வீக எண்ணம் எப்போதுமே சமுதாயத்துக்கு நன்மையே செய்விக்கும்.

இந்த ஆறு காரணங்களால் தோன்றும் எண்ணங்களில்
தெய்வீக எண்ணம் தவிர மற்றவைகள் நன்மையுமளிக்கும். தீமையுமளிக்கும். இந்த எண்ணங்களை செயல்படுத்தும் முன்
ஒருமுறைக்கு பலமுறை யோசித்து நன்மைதரும்
செயல்களை மட்டும் செய்து, தீமைதரும் செயல்களைத்
தவிர்த்து வாழ முற்பட்டால் நமக்கும் துன்பமில்லை.
சமுதாயத்துக்கும் துன்பமில்லை. தீய எண்ணங்களை
தவிர்ப்போம். நல்ல எண்ணங்களை வளர்ப்போம்

வாழ்க வையகம் ! வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன் !

Friday, August 17, 2018

சமூக வலைத்தள பாவனையாளர்களின் கவனத்திற்கு **


தற்போது சமூகவலைத்தளத்தில் அதிகம் பரவி வரும் ஒரு விடயம் இதுவாகும்.அதாவது ஆங்கில பட நடிகரான ரொக் என்ற நடிகரின் புகைப்படத்துடன் இதை பகிர்ந்தால் உங்களுக்கு பணம் வந்துசேரும். இவ்விடயம் சம்மந்தமாக மேற்க்கொண்ட ஆய்வுகளின் படி இவ்விடயம் முற்றிலும் தவறான மற்றும் பொய்யான ஒரு விடயம் என் கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக தற்போது அதிகளவு மக்கள் இதனை உண்மை என நம்பி இதனை சமூகவலைத்தளத்தில் பகிர்ந்த வண்ணம் இருக்கின்றனர்.

இது முற்றிலும் தவறான ஒன்று இதில் போலியாக புகைப்படங்களும் இணைக்கபட்டு அவர்கள் வென்றுவிட்டதனைப்போல காட்டி வருகின்றனர் இவை அனைத்துமே பொய் என்பது வெட்டவெளிச்சமாகியுள்ளது.


இது சில சமூகவலைத்தள விசுமிகளால் உருவாக்கபட்டுள்ள போலியான ஒரு விடயம் எனவும் இதனை பகிர்வதால் தனிப்பட்ட ரீதியில் பிரச்சனைகளை எதிர்நோக்கவேண்டிவரும் எனவும் கண்டறியப்பட்டுள்ளது.

ஆகவே இதனை நம்பவேண்டாம்..அதிகளவு கல்வி தரத்தில் உயர்ந்துள்ள மக்களை கொண்ட இதனைப்போன்ற அற்ப விடயங்களை நம்பி அதில் நாட்டம்ட செலுத்திவருகின்றமையும் பணத்தாசை காட்டி ஏமாற்றும் கும்பலுடன் இணையவேண்டாம் எனவும் எச்சரிக்கிறது
…இவ்விடயம் இந்திய தமிழ்நாட்டுக்கும் பொருந்தும் இது முற்றிலும் பொய்யான தகவல் நம்பி ஏமாற வேண்டாம்..ஏமாற்ற வேண்டாம.

www.trincotamil.com

Thursday, July 5, 2018

பெண்களின் ஆரோக்கியம் காக்கும் பாரம்பரிய உணவு முறை

தமிழகத்தில் பன்னெடுங்காலமாகப் பெண்கள் பூப்பு எய்திய பின் பிரத்யேகமான ஆரோக்கிய உணவு வகைகளைக் குறைந்தபட்சம் ஆறு மாதங்களுக்குக் கொடுப்பது வழக்கமாக இருந்துவந்தது.
இந்த ஆரோக்கியப் பழக்கம் தற்போது மறைந்துபோய், பெண் பூப்பு எய்திய அன்றைக்கு மட்டும் கொடுக்கும் சடங்காகச் சுருங்கிவிட்டது.
பூப்பு கால உணவுகளைச் சாப்பிடுவதன்மூலம் மலட்டுத்தன்மை நீங்கும்; சினைப்பை கட்டிகள் உருவாவது தடுக்கப்படும்;
கருப்பைக் கட்டிகள் வருவது தடுக்கப்படும்; கருப்பை நீக்கம் தேவைப்படாது என்பதே இந்தச் சித்த மருத்துவ உணவு முறையின் சிறப்பம்சம். பூப்பு காலச் சித்த மருத்துவ உணவு முறை:
தமிழக மக்களிடம் பல நூற்றாண்டு காலமாக நடைமுறையில் இருந்துவந்த இந்த மகளிர் சித்த மருத்துவ உணவு முறையை, தினமும் ஒரு நேரமோ ஒரு வேளையோ உட்கொள்வது நல்லது.
இதில் எள் -உளுந்து -வெந்தயம் என்ற வரிசையை மாற்றக்கூடாது என்பது மிக முக்கியமானது.
ஆரோக்கியமான உணவின்மூலம் மாதவிடாய் நோய்கள் அண்டாத ஆரோக்கியமான குழந்தைகளைச் சமூகத்தில் பெருக்க இந்த உணவு முறை துணைச் செய்யும்.
ஒரு நாட்டின் ஆரோக்கியத்துக்கு, அந்நாட்டுப் பெண்களின் ஆரோக்கியமே அடிப்படை.
மாதவிடாய் கால முதல் நாள் முதல் 5-வது நாள்வரை: எள்ளு உருண்டை
சேர்க்கப்படும் பொருட்கள்:
வெள்ளை எள் – ஒரு கப்,
சர்க்கரை முக்கால் கப்,
ஏலக்காய் பொடி – சிறிதளவு
செய்முறை:
வெள்ளை எள்ளைப் பழுப்பு நிறமாக மாறும்வரை வறுத்து, மிக்ஸியில் இட்டு அரைத்து எடுத்துச் சர்க்கரை, ஏலக்காய் பொடி சேர்த்து நன்றாகப் பிசைந்து உருண்டையாக்கிக்கொள்ளவும்.
மருத்துவப் பயன்: பெண்களுக்குப் பூப்பு நன்றாக வெளிப்பட உதவும் phyto oestrogen எள்ளில் உள்ளது.
மாதவிடாய் ஏற்பட்ட ஆறு நாட்கள் முதல் 14 நாட்கள்வரை: உளுந்தங்களி
சேர்க்கப்படும் பொருட்கள்: சம்பா அரிசி- ஒரு பங்கு, முழு உளுந்து – கால் பங்கு, ஏலக்காய் பொடி – சிறிதளவு, கரும்பு வெல்லம் – தேவையான அளவு
செய்முறை:
சம்பா அரிசி, முழு உளுந்து ஆகியவற்றை லேசாக வறுத்துப் பொடியாக்கவும். கரும்பு வெல்லத்தில் தண்ணீர் சேர்த்துக் கொதிக்க வைத்து ஏலக்காய் பொடி, அரைத்த அரிசி, உளுந்தைக் கலந்து நல்லெண்ணெய் சேர்த்துக் களிப்பதம் வரும்வரை கிளறி இறக்கவும்.
மருத்துவப் பயன்: பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் இடுப்பு வலி, உடல் வலியை நீக்கும்.
மாதவிடாய் ஏற்பட்ட 15-வது நாட்கள் முதல் 28-வது நாட்கள்வரை: வெந்தயக் கஞ்சி
சேர்க்கப்படும் பொருட்கள்: வெந்தயம் -ஒரு பங்கு, சம்பா அரிசி – நான்கு பங்கு
செய்முறை:
சம்பா அரிசி மற்றும் வெந்தயத்தை இளம் சிவப்பாக வறுத்துத் தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கஞ்சியாகக் காய்ச்சி எடுத்துக்கொள்ளவும்.
மருத்துவப் பயன்:
இது கர்ப்பப்பையில் கட்டி வராமல் தடுக்கும், ஹார்மோன் தவறுகளைச் சீர் செய்யும். கர்ப்பப்பையில் சளி சவ்வுகள் சரியான தடிமனுக்குப் பராமரிப்பதன் மூலம் கருப்பை ஆரோக்கியமாகத் திகழும்.
அன்புடன்

Thursday, June 21, 2018

சரியான ஆரோக்கியமான உணவுப்பழக்கவழக்கம்

தினமும் நாம் பல வகையான உணவுகளை உட்கொள்கிறோம். இவற்றிலுள்ள சத்துகள், புரதம் போன்றவற்றை கணக்கில் எடுத்துக்கொள்ளும் நாம், அவற்றை எந்த எவ்வளவு சாப்பிடவேண்டும் என்பதை கணக்கிடுவதில்லை.
நாம் சாப்பிடும் உணவின் அளவை நினைவில் வைத்துக்கொளவது என்பது கடினமான ஒன்று. சத்தான உணவுகளுக்கும் பாஸ்புட்களுக்கு மத்தியில் நாம் பல நேரங்களில் அகப்பட்டுக்கொள்ளக் காரணம், அவற்றிலிருந்து தேர்வுசெய்ய நமக்கு பல வாய்ப்புகள் உள்ளது என்பதே.
ஆக, எந்த உணவை எவ்வளவு சாப்பிட வேண்டும்? உணவிற்கான அளவு என்ன?
உங்களின் உள்ளங்கையே அதற்கான சிறந்த அளவுகோல் என்கிறார் உணவு நிபுணரான மோனிகா செயிமிக்கா.
நமது கைகளின் அளவை வைத்து எத்தகைய உணவை எவ்வளவு எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை பிரிக்கமுடியும் என்கிறார் அவர்.
` காய்கறிகள், புரதம், பழங்கள், பால் வகை உணப்பொருட்கள் என நம்மிடம் பல வகையான உணவுக்குழுக்கள் உள்ளன. ஆகவே, சிறந்த, சமமான, சரியான அளவிலான உணவுகளை தேர்வு செய்வது என்பது நமக்கு மிகவும் முக்கியமானது. இதை சரியாக நினைவில் வைத்துக்கொள்ள நம் கைகளின் அளவை நினைவில் வைக்க வேண்டும்.`
அவர் கூறும் வழிமுறைகள் என்னென்ன?



பழவகைகள்:
அது ஒரு ஆப்பிளாக இருந்தாலும், சோளமாக இருந்தாலும் உள்ளங்கை அளவை நினைவில் கொள்ளவேண்டும் என்கிறார் அவர். நாம் சாப்பிடும் தட்டில் 1/3 பங்கு கார்போஹைட்ரை இருந்தல் வேண்டும்.
புரதம்:
சிறந்த அளவிலான புரதச்சத்தை உணவில் சேர்த்துக்கொள்ள மாமிசம், மீன், பருப்பு, பயறு ஆகியவற்றை ஒரு நாளின் உணவில் இரண்டு அல்லது மூன்று பகுதிகளில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று பரிந்துறைக்கிறார். புரதத்தின் அளவு என்பது உங்கள் கையில் பின்பகுதி அளவு இருத்தல் வேண்டும்.

பால் வகை உணவுகள்:
பால் அல்லது பாலுக்கு மாற்றாக உள்ள உணவுகளை ஒரு நாளில் இரண்டு அல்லது மூன்று பகுதிகள் எடுத்துக்கொள்ள வேண்டும். பால்வகை உணவு என்பது, தீப்பெட்டி அளவிலான வெண்ணை, சிறிய கோப்பை ஆளவு பால் அல்லது சிறிதளவு தயிரான இருக்கலாம்.
குறைந்தது 80% நேரங்களில் சத்தான உணவையே உட்கொள்ள முயலவேண்டும் என்கிறார் மோனிகா.
`சில நாட்களில் ஆரோக்கியமற்ற உணவுகளை உண்னவேண்டும் என்பதுபோல தோன்றுவது மனித இயல்பே. ஆனால், அதையே ஒரு வழக்காமக நாம் எடுத்துக்கொள்ளக் கூடாது. மீண்டும் சத்தான உணவுகளை சாப்பிடும் பழக்கத்திற்கு திரும்புவதே சிறந்தது` என்கிறார் அவர்.


Friday, June 1, 2018

பாகற்காய் கசக்கும் காய்

கசக்கும் காய் என்றாலும் பாகற்காயை சமையலில் சேர்த்துக் கொள்வதில் இருந்தே இதன் முக்கியத்துவம் புரியும். பாகற்காயின் அறிவியல் பெயர் மொமோர்டிகா சாரன்டியா. தெற்கு ஆசியாவை தாயகமாகக் கொண்டவை. தற்போது ஆசியநாடுகள் முழுமையும் பரவலாக விளைகிறது. ஆண்டு முழுவதும் சந்தையில் விற்பனைக்கு கிடைக்கும். கொடி வகையைச் சேர்ந்த இந்த காய், கொம்பு பாகற்காய், மிதி பாகற்காய் என இரண்டு வகைப்படும். 

பாகற்காயின் கசப்புச் சுவைக்கு பயந்தே பலர் பாகற்காயை சாப்பிடுவது இல்லை.
பாகற்காயின் மருத்துவ குணங்களைப் பற்றி பார்ப்போம்....

1) பாகற்காய், உணவுப் பையிலுள்ள பூச்சியைக் கொல்லும். பசியைத் தூண்டும்., பித்தத்தைத் தணிக்கும். பெண்களுக்கு தாய்ப்பால் சுரக்க உதவும். இதனுடன் புளி சேர்த்துக் கொண்டால் நல்லது. இந்த காயை, அவ்வப்போது உணவில் சேர்த்துக் கொண்டால், இருமல், இரைப்பு, மூலம், வயிற்றுப் புழுவை நீங்கும்.

2) ஒரு பிடி கொடிப்பாகல் இலையுடன், ஐந்தாறு மிளகைச் சேர்த்து காரமற்ற அம்மியில் அரைத்து, கண்களைச் சுற்றிப் பற்றுப் போட்டு வர, மாலைக்கண் நோய் குணமாகும்.

3) நீரிழிவு நோயாளிகளுக்கு, பாகற்காய் நல்ல மருந்தாகும்.மூன்று நாட்களுக்கு ஒருமுறை பாகற்காய் ஜூஸ் குடித்து வந்தால், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைக்கலாம்.

4) பாகற்காய் “ஜூஸ்” குடித்து வந்தால், செரிமான அமிலம் சுரப்பது மேம்படும்., எனவே பசியும் அதிகரிக்கும். கணைய புற்றுநோய் அணுக்களை அழிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.மேலும் பாகற்காய், எச்.ஐ.வி.க்கு எதிரான நோய்த்தடுப்பு சக்தியை வழங்குவதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

5) தினம் இரண்டு வேளை 1 டீஸ்பூன் பாகற்காய் ஜுஸுடன் சர்க்கரை கலந்து சாப்பிட்டு வந்தால் மூலநோயினால் ஏற்படும் ரத்தப்போக்கு நின்றுவிடும். பாகற்காய் சூட்டை கிளப்பும் என்பதால் அளவுக்கு அதிகமாக தொடர்ந்து சாப்பிடக்கூடாது.

6) பாகற்காய் இலையின் சாறு ஓர் அவுன்சில் சிறிது வறுத்துப் பொடித்த சீரகத் தூளைக் கலந்து காலை, மாலை இரண்டு வேளையும் உட்கொண்டால் விஷ சுரம் நின்று விடும்.

7)இந்தபாகல் இலையை அரைத்து உடம்பெல்லாம் தடவி ஒரு மணி நேரம் ஊறிய பின் குளிக்க வேண்டும். இவ்வண்ணம் மூன்று நாட்கள் செய்து வந்தால் போதும் நாய்க்கடியின் விஷம் உடம்பில் ஏறாது.

8) பாகல் இலைச் சாற்றை நிறையக் குடித்து, வாந்தி எடுத்தால், அத்துடன் பாம்பு (கண்ணாடி விரியன்) கடித்த விஷம் நீங்கும். உடலில் கட்டி, புண்கள் இருந்தால் ஒரு “கப்” பாகற்காய் “சூப்” எடுத்து, அதில் ஒரு “ஸ்பூன்” எலுமிச்சைச் சாறு கலந்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட, மூன்று மாதங்களுக்குள் ரத்தம் சுத்தமாகி தோல் பளபளப்பாகி விடும்.

9)பாகற்காயில் “பீட்டா-கரோட்டின்”மற்றும் “வைட்டமின்-ஏ” உள்ளதால், கண் சம்மந்தமான நோய்களுக்கு தீர்வாக உள்ளது. மேலும் இதில் உள்ள “வைட்டமின்-சி” மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், கண்களுக்கு ஏற்படும் பாதிப்பில் இருந்து உங்களை பாதுகாக்கும்.

10) உடற்செயலின் போது 'சாரான்டின்' எனும் பொருளை பாலிபெப்டைடு-பி உருவாக்குகிறது. சாரான்டினானது குளு கோசை அதிகம் கிரகித்து சர்ச்கரையின் அளவை உடலில் கட்டுக்குள் வைக்கிறது. எனவே நாம் பாகற்காயை உண்ணுவதால் 'டைப்-2' நீரிழிவில் இருந்து பாதுகாப்பு தருகிறது பாகற்காய்.

இதில் உள்ள சத்துக்கள் என்ன?

1) வைட்டமின்-பி3, வைட்ட மின் பி-5, வைட்டமின்-பி6 போன்ற அத்தியாவசிய வைட்டமின்களும், இரும்பு, துத்தநாகம், பொட்டாசியம், மாங்கனீசு மற்றும் மக்னீசியம் போன்ற முக்கியத் தாதுக்களும் பாகற்காயில் இருந்து உடலுக்கு கிடைக்கிறது.

2) பீட்டா கரோட்டின், ஆல்பா கரோட்டின், லுடின், ஸி-சாந்தின் போன்ற புளோவனாய்டுகள் உள்ளன. அத்துடன் வைட்டமின்-ஏ சிறந்த அளவில் உள்ளது. இவை புற்றுநோயை உருவாக்கும் பிரீ-ரேடிக்கல்களை விரட்டுவதோடு, வயது மூப்படைவதில் இருந்தும், வியாதிகள் தாக்காதவாறும் காக்கும்.

3) சிறந்த நோய் எதிர்ப்பு பொருளான வைட்டமின்-சி, பாகற்காயில் மிகுதியாக உள்ளது. 100 கிராம் பாகல் விதையில் 84 மில்லிகிராம் வைட்டமின்-சி உள்ளது. இயற்கை நோய் எதிர்ப்பு பொருளான இது, தீங்கு விளைவிக்கும் பிரீ-ரேடிக்கல்களை விரட்டியடிக்கும்.

4)பாகல் விதையில் சிறப்புமிக்க சத்துப்பொருளான போலேட் உள்ளது. 100 கிராம் பாகற்காயில் 72 மைக்ரோகிராம் போலேட் உள்ளது. இது கருவில் வளரும் குழந்தைக்கு நரம்பு பாதிப்புகள் உருவாகாமல் தடுப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும் தாதுவாகும்.

5) ஜீரண சக்தியை அதிகரிக்கும் ஆற்றல் பாகற்காய்க்கு உண்டு. மலச்சிக்கல் மற்றும் அஜீரணத்தை போக்கும். பாகற்காயின் விதைகள் எளிதில் ஜீரணமாகும் நார்ப்பொருட்கள், தாதுஉப்புக்கள், வைட்டமின்கள், நோய் எதிர்ப்பு பொருட்களைக் கொண்டது. * 'பாலிபெப்டைடு-பி' எனப்படும் குறிப்பிடத் தக்க சத்துப்பொருள் பாகற்காயில் காணப்படுகிறது. இதனை தாவரங்களின் 'இன்சுலின்' என்று கருதுகிறார்கள். ஏனெனில் தாவரங்களில் சர்க்கரை மிகுதியாகாமல் கட்டுப்படுத்துவது இதுதான்.

6) குறைந்த ஆற்றல் வழங்குபவை பாகற்காய்கள். 100 கிராம் பாகற்காயில் 17 கலோரி ஆற்றலே உடலுக்கு கிடைக்கிறது



---



மாடித் தோட்டத்தில் பாகற்காய் எப்படி வளர்ப்பது பற்றி தெரிந்து கொள்வோம்....

மாடித் தோட்டம்

தேவையான பொருட்கள்

1. Grow Bags அல்லது Thotti.

2. அடியுரமாக இட மணல், தென்னை நார் கழிவு மக்கியது, மண் புழு உரம், செம்மண், வேப்பந்தூள், பஞ்சகாவ்யா.

3. விதைகள்

4. நீர் தெளிக்க பூவாளி தெளிப்பான்

5. பந்தல் போடுவதற்கான உபகரணங்கள்

தொட்டிகள்

தொட்டிகளில் மண் போடும்போது அதனுடன் சம அளவு இயற்கையாக மட்கும் குப்பைகள் சேர்க்க வேண்டும்.

தேங்காய் நார் கழிவு இரண்டு பங்கு, மாட்டுச்சாண‌ம் ஒரு பங்கு, சமையலறை கழிவு ஒரு பங்கு என முழுவதும் இயற்கை உரங்களை கொண்டும் தொட்டியை நிரப்பலாம். இந்த கலவை தயாரானதும் உடனே விதைக்க கூடாது. 7-10 நாட்கள் கழித்து விதைப்பு செய்ய வேண்டும்.

இது கொடி வகை என்பதால் 3 அடிக்கு மேலாக இருக்கும்படி தொட்டிகளில் மண் மற்றும் உரக்கலவையை நிரப்ப வேண்டும்.

விதைத்தல்

ஆரோக்கியமான மற்றும் நோய் தாக்காத விதைகளை தேர்ந்தெடுத்து விதைக்க வேண்டும். இது கொடி வகை என்பதால் 3 முதல் 5 விதைகள் வரை ஊன்றலாம். வளர்ந்த செடிகளில் ஏதாவது வளர்ச்சி குறைந்து காணப்பட்டால் அந்த செடியை மட்டும் நீக்கி விட வேண்டும்.

நீர் நிர்வாகம்

விதைகளை விதைத்தவுடன் பூவாளியால் நீர் தெளிக்க வேண்டும். இரு நாட்களுக்கு ஒருமுறை நீர் ஊற்ற வேண்டும்.

பந்தல் முறை

மாடியில் பந்தல் போடுவது எளிமையான ஒன்று ஆகும். அதற்கு நான்கு சாக்கில் மணலை நிரப்பி ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு மூங்கில் கம்பை ஆழமாக ஊன்றி மூலைக்கு ஒன்றாக நான்கு சாக்குகளையும் நான்கு மூலைகளில் வைக்க வேண்டும். அடியில் சிறு கற்களை கொண்டு மேடை போல் அமைத்து அதன்மீது சாக்கு பைகளை வைப்பது சிறந்தது. பின்னர் இதில் கயிறு அல்லது கம்பிகளை குறுக்கு நெடுக்காக கட்ட வேண்டும். இந்த பந்தலில் கொடிகளை படர விட வேண்டும்.

உரங்கள்

செடிகளைக் காக்கும் இயற்கை பூச்சிக் கொல்லியான வேப்ப எண்ணையை மாதம் ஒரு முறை தெளிக்க வேண்டும்.

வேப்ப இலைகளைச் சேமித்து நன்கு காய வைத்துத் தூள் செய்துகொள்ள வேண்டும். இந்தத் தூளைச் செடி ஒன்றுக்கு ஒரு பிடி வீதம் செடியின் வேர் பகுதியில் போட்டு கிளறிவிட வேண்டும். இதுவே அடி உரமாகவும், பூச்சிக் கொல்லியாகவும் செயல்படும்.

பாதுகாப்பு முறைகள்

வளரும் நுனி கிளைகளை கவாத்து செய்வதால் அதிக கிளைகள் தோன்றுவதற்கு ஏதுவாக இருக்கும். 15 நாட்களுக்கு ஒருமுறை கழிவுகளைக் கிளறுவதால் கீழுள்ள கழிவுகள் மேலும், மேலுள்ள கழிவுகள் கீழும் செல்வதால், கழிவை மக்கச் செய்யும் நுண்ணுயிர்களின் செயல்பாடு துரிதமாக இருக்கும்.

பூச்சி தாக்குதலை தவிர்க்க வாரம் ஒரு முறை வேம்பு பூச்சிவிரட்டியை 2 மில்லி என்ற அளவில் 1 லிட்டர் நீரில் கரைத்து மாலை வேளையில் செடிகளின் மேல் தெளிக்க வேண்டும்.

பஞ்சகாவ்யா 50 மில்லி என்ற அளவில் ஒரு லிட்டர் நீரில் கரைத்து பைகளில் ஊற்ற வேண்டும். இது சிறந்த நோய் தடுப்பானாக செயல்படும்.

அறுவடை

இது 2 முதல் 3 மாதம் வரை பயன் தரும். காய்களை முற்றி விடாமல் சரியான பருவத்தில் இருநாட்களுக்கு ஒருமுறை அறுவடை செய்ய வேண்டும்