Thursday, August 14, 2014

யோகா என்றால் என்ன..?

யோகா,யோகா என்று சொல்கிறார்களே,

யோகா என்றால் என்ன..?

பதில்:

யோகா என்பது உடல் பயிற்சி அல்ல.

உங்கள் உடலை முறுக்கிக் கொள்வது,

மூச்சைப் பிடித்துக் கொள்வது,

தலையில் நிற்பது,

இவையெல்லாம் யோகா அல்ல.

யோகா என்ற வார்த்தைக்கு ஒன்றிணைதல் என்று பொருள்.

அதாவது

உடல்,

மனம்

இவைகளை ஒன்றிணைக்கும் செய்யும் பயிற்ச்சியே யோகா பயிற்ச்சி ஆகும்.

மற்றும்,

யோகா என்றால்,

நம் வாழ்வின் ஒவ்வொரு அம்சமும்,

நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும்,

நாம் செய்யும் ஒவ்வொரு செயலும்,

நாம் உள்ளே இழுக்கும் ஒவ்வொரு மூச்சும்,

நம் இதயத்தின் ஒவ்வொரு துடிப்பும்,

நம்முடைய வளர்ச்சியின் ஒரு செயல்முறையாக இருக்க வேண்டும் என்பதுதான்.

அப்படி இருந்தால் அதுதான் யோகா.

எனவே யோகத்தின் செயல்முறையில் இல்லாதவர்கள் என்று இந்த உலகில் யாருமே இல்லை.

கேள்வி..

யோகா என்பது எல்லோருக்குமானதா..?

இல்லை இது இந்து மதத்திற்கு மட்டும் உரித்ததா..?

நிச்சயமாக இது எல்லோருக்கும் பொதுவானதுதான் ஆனதுதான்.

ஏனென்றால்,

ஒவ்வொரு மனிதருக்கும் அவருக்குள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்ற ஏக்கம் இருக்கிறது.

ஒவ்வொருவரும் தாங்களாகவே சில யோகங்களை,

அவர்கள் தங்களுக்கு தெரியாமலேயே செய்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

தங்களது புத்திசாலித்தனத்தின் மூலமாகவோ,

உணர்ச்சியின் மூலமாகவோ,

தங்கள் உடலின் மூலமாகவோ,

தங்களின் சக்தியின் மூலமாகவோ,

ஏதோ ஒருவிதமான யோகாவை அவர்கள் நாள்தோறும் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

அதை சற்று முறைப்படுத்தி செய்தால் பலனுடையதாக இருக்கும்.

மற்றும்,

மக்களுக்கு யோகா என்பது ஒரு புதிய விஷயம் அல்ல.

கேள்வி...

பிராணாயம் என்றால்..?

மூச்சை கட்டுப்படுத்தி அதன் மூலம் மனம்,உயிர் ஆற்றலை கட்டுப்படுத்தும் பயிற்ச்சிக்குத்தான் பிராணாயாமம் ஆகும்.

கேள்வி...

தியானம்.....?

ஏதாவது ஒரு பொருளின் மீது மனதை குவித்து
உள் ஆற்றலை பிரபஞ்ச ஆற்றலோடு கலக்கும் பயிற்ச்சியால் மனதை விரிக்கும் முயற்சியே தியானம் ஆகும்.

Monday, August 4, 2014

நாராயணசாமி ஒரு ஆய்வாளர்.

நாராயணசாமி ஒரு ஆய்வாளர்.

ஒரு நாள் கையில் ஒரு பாட்டிலும் ஒரு ஸ்பூனுமாக நாராயணசாமியின் ஆய்கவத்தினுள் நுழைந்தான் ஒரு ஆசாமி.

"வாங்க சார், என்ன வேணும் உங்களுக்கு?" கேட்டார் நாராயணசாமி.

"நான் ஒன்றைத் தருகிறேன், அதை ருசித்துப் பார்த்துச் சொல்கிறீர்களா...?" என்றான் அந்த ஆசாமி.

"நிச்சயமாக... தாருங்கள்"

உடனடியாக அந்த ஆசாமி, தன் கையில் வைத்திருக்கும் பாட்டில் இருந்து ஒரு ஸ்பூன் திரவத்தை ஊற்றி நாராயணசாமியிடம் கொடுத்தான்.

அதை வாயில் ஊற்றி, ருசித்துப் பார்த்த நாராயணசாமி சற்றே முகச் சுளிப்புடன்....

"கொஞ்சம் உப்பாக இருக்கிறது ..." என்றார்.

"நல்லவேளை உப்பாகத்தானே இருக்கிறது. இனிப்பாக இல்லையே...."

"இல்லை சார். ஏன்.. என்னாயிற்று?" புரியாமல் நாராயணசாமி கேட்க,

அந்த ஆசாமி சொன்னான்,

"வேற ஒண்ணும் இல்லை சார் ... என்னை டெஸ்ட் பண்ணின டாக்டர் எனக்கு சர்க்கரை நோய் இருக்கலாம் என சந்தேகம் தெரிவித்து, எனது சிறுநீரை டெஸ்ட் பண்ணச் சொன்னார். நல்லவேளை நீங்கள் சர்க்கரை இல்லை ... உப்பாக இருக்கிறது எனத் தெரிவித்து விட்டீர்கள். நன்றி"

சிகரட் கம்பனி விளம்பரம்....


ஒரு தேசத்தில் சிகரட் விற்பனை கிடையாது யாரும் குடிப்பதும்
கிடையாது..
.
அங்கு உள்ள சிகரட் கம்பனி ஒரு ஆளை வேலைக்கு சேர்த்தது..
அவன் பிரச்சார உக்தியை கையாண்டான்...
.
அதற்கு ஒரு விளம்பரம் செய்தான் ..
.
சிகரட் குடித்தால்..!
.
1 திருடன் உங்கள் வீட்டுக்கு வரமாட்டான்
.
2 உங்களுக்கு முதுமையே வராது
.
3 பெண் குழந்தை பிறக்காது
.
இந்த விளம்பரத்தை பார்த்து எல்லோரும் சிகரட் குடிக்க
ஆரம்பித்து விட்டார்கள்....
அந்த தேசத்தில் இருந்த சமூக ஆர்வலர் ஒருவர் இந்த
கதை தவறு என்பதை நீருபிக்க உச்ச நீதி மன்றத்தில்
வழக்கு தொடர்ந்தார்...
நீதி மன்றத்தின் முன் வழக்கு வந்தது...
சிகரட் விற்பனை பிரதிநிதி நீதி மன்றதின் முன்
ஆஜரானார்...
.
நீதிபதி அவரிடம், “ இப்படி ஒரு கருத்தை விளம்பரம்
செய்து உள்ளாய்... இது அறிவியலுக்கு ஏற்றதாய்
இல்லையே..!! “ என்று கேட்டார்
.
அதற்கு அவன் சொன்னான்,
“ முதலில் நான் என்ன சொன்னேன்...?
திருடன் உங்கள் வீட்டுக்கு வரமாட்டான்..
ஆமாம் வரமாட்டான்..
காரணம் எப்பொழுது சிகரட் குடிக்க
ஆரமித்து விட்டார்களோ அப்பொழுதே இருமல்
வந்து விடும்.. இருமிக் கொண்டே இருப்பதால்
இவர்களுக்கு தூக்கம் வராது...
முழித்து கொண்டு இருக்கிறார்கள் என்று திருடன்
வரமாட்டான்...
.
2 வது என்ன சொன்னேன்
.
முதுமையே வராது... எப்படி வரும்...?
சிகரட் குடித்தால் இளமையிலே செத்து விடுவான்
எப்படி முதுமை வரும்...?
.
3 வது என்னசொன்னேன்
.
பெண் குழந்தை பிறக்காது...
எப்படி பிறக்கும்...? சிகரட்டில் நிக்கோடின் எனும் நச்சு தன்மை
இருப்பதால் மலட்டு தன்மை வந்துவிடும்
பிள்ளை பேறே இருக்காது இதில் ஆண் என்ன பெண்
என்ன பிள்ளையே பிறக்காது.... “
என்று சொல்லி முடித்தான்...
.
அவன் சொன்னது சரிதான் நாம் தான்
யோசித்து முடிவு எடுக்க தவறிவிட்டோம்
என்று வழக்கை தள்ளுபடி செய்தார் நீதிமதி...
.
# இப்படி தந்திரமான பேச்சைதான் அரசியல்வாதிகளும்,
விளம்பரம் செய்வோர்களும் கையாள்கிறார்கள்....
நாம்தான் விழிப்புடன் இருத்தல் வேண்டும்....

****புதுக்குறள் *******

****புதுக்குறள் *******

1.அம்மா சுட்ட தோசை ருசித்திடும்-
ருசிக்காதே மனைவி சுட்ட தோசை...

2.முதுகில் குத்துவோரை ஒறுத்தல் அவர் மூக்குவீங்க
மூஞ்சியில் குத்தி விடல்...

3.கள்ளஓட்டு லஞ்சம் வெட்டுக்குத்து இந்நான்கும்
செய்வது அரசியல்வாதிக்கியல்பு...

4.யாகாவாராயினும் Password காக்க காவாக்கால்
சோகாப்பர் hack செய்யப்பட்டு.

5.விரும்பிய மனம் விரும்பா விடின்
துரும்பா இளைப்பார் தூய காதலர்..

6.ரன் எடுத்து ஆடுவாரே ஆடுவார்...
மற்றெல்லாம் டக்கெடுத்து பின் செல்பவர்

7.CHAT எனில் FB-CHATசெய்க இல்லையேல்
CHATடலின் CHATடாமை நன்று

8.மாவினால் சுட்ட வடை உள்ளாறும் ஆறாதே
வாயினால் சுட்ட வடை

9.மொக்கை போடுதல் எல்லார்க்கும் எளிது
அரியவாம் கடலைபோ டுதல்

10.பீடியால் சுட்ட புண் உள்ளாறும்
ஆறாதே லேடியால் கெட்ட மனம்

11.கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை தன் திருமணத்தன்று
தாகசாந்தி செய்ய மறுக்கும் நண்பனுக்கு

12.போடுக கடலை போடுக போட்டபின் பில்லுகட்டுக அதற்குத் தக...