Monday, October 28, 2013

ரொம்ப நாளா சந்தேகம்...

ஒரு பையனுக்கு ரொம்ப நாளா சந்தேகம்.

முதல் மனுசன் எப்படி வந்தான்? அப்படின்னு.

அவன் அவனோட அப்பா கிட்டே போய், அப்பா, முதல் மனுசன் எப்படி தோணினான். அப்படின்னு கேட்டான்.

அதுக்கு அவர் சொல்றாரு, நாமெல்லாம் ஆதாம் ஏவாள் மூலமா உலகுக்கு வந்தவங்க. அப்படின்னு பதில் சொல்றார்.

இருந்தாலும் பையனுக்கு குழப்பம் இன்னும் தீரலை.
அவனோட அம்மா கிட்டே போய் கேட்குறான்.

அதுக்கு அவங்க சொல்றாங்க, நாமெல்லாம் குரங்கிலிருந்து வந்தவங்க அப்படின்னு.

இப்போ இன்னும் குழப்பமாயிடுச்சி பையனுக்கு. ரொம்ப யோசனையா உட்கார்ந்து இருக்கான்.

அதை பார்த்து அவங்க அப்பா, என்னடா சந்தேகம் இன்னும் தீரலையான்னு கேட்குறார்.

அந்த பையன் அவங்க அம்மா சொன்னதை சொல்றான்.

அப்பா உடனே சொல்றாரு, ரெண்டுமே கரெக்ட் தான்டா. நான் எங்க வம்சாவளியை சொன்னேன். உங்கம்மா அவ வம்சாவளியை சொல்லி இருக்கா அப்படின்னு.

பையன் இப்போ ரொம்ப தெளிவாயிட்டான்.

அப்பாவை
கேட்டான், என்னப்பா இன்னைக்கு சாப்பாடு உங்களுக்கு வெளியிலையா...

Saturday, October 26, 2013

வக்கீலும் பெரிசும் ...

ஒரு வக்கீலும் ஒரு பெரிசும் பக்கத்து பக்கத்து சீட்டில் பிளேனில் பிரயாணம் பண்றாங்க.

வக்கீல் பெரியவரிடம் : நாம் ஒரு கேம் விளையாடலாமா?

பெரியார்: அசதியா இருக்கு. குட்டித் தூக்கம் போடலாம்ன்னு இருக்கேன்.

வக்கீல்: (வாய் சும்மா இருக்குமா?) இது இண்டரஸ்டிங். நான் ஒரு கேள்வி கேப்பேன். அதுக்கு நீங்க பதில் சொல்லிட்டா ரூவாய் 500/ தருவேன். பதில் சொல்லைன்னா நீங்க ரூபாய் 5/- கொடுத்தா போதும். அதே போல் நீங்க கேளுங்க? பதில் சொல்லாட்டி நான் ஐநூறு கொடுப்பேன். பதில் சொல்லிட்டா நீங்க ஐந்து ரூபாய் கொடுத்தா போதும். என்ன சொல்றிக?

பெரியவர்: சரி கேளுங்க.

வக்கீல்: நமக்கும் சந்திரனுக்கும் இடைப்பட்ட தூரம் எவ்ளோ?

பெரியவர் ஒன்னும் பேசாமல் அஞ்சு ரூபாய் கொடுத்துட்டார்.

நீங்க கேள்வி கேளுங்கன்னார் வக்கீல்.

பெரியார்: மூன்று கால்களுடன் மலை ஏறி நான்கு கால்களுடன் திரும்ப வரும் மிருகம் எது?

வக்கீல் பதில் தெரியாமல் மூச்சு விடாம ஐநூறு கொடுத்தார். அப்புறம் பெரியவருடன் நீங்க பதில் சொல்லுங்க என்றார்.

பெரியவர்: ஐந்து ரூபாய் கொடுத்திட்டு எனக்கும் தெரியாதுன்னார். 

Thursday, October 17, 2013

உடல் மொழி



1.மற்றவரிடம் பேசும்போது, கைகளை கட்டிக் கொள்ளாதீர்கள். அது உங்களை பலவீனமானவராக காட்டுகிறது.

2.மற்றவரின் கண்களை நேராகப் பார்த்து பேசவும். அது உங்களை நேர்மையானவராகக் காட்டும்.

3.மிகத்தொலைவிலிருந்து மற்றவரோடு குரலை உயர்த்திப் பேசாதீர்கள்.

4.நீங்கள் பேசுவதை மற்றவர் கேட்க வேண்டுமானால் அவர் முகத்தைப் பார்த்து பேசவும்.

5.நேராக அமர்ந்து அல்லது நின்று பேசவும். கூன் போட்டு அமர்ந்தால் மற்றவர் உங்களை சோம்பேரி என நினைக்கக்கூடும்.

6.பேசும்போது முடியை கோதிக் கொள்வதையோ அல்லது அடிக்கடி உடைகளை சரிப் படுத்துவதையோ தவிர்க்கவும். அது உங்களை நம்பிக்கையற்றவராகக் காட்டும்.

7.நகத்தையோ, பென்சில் / பேனா முனையையோ கடிப்பதை தவிர்க்கவும். அது உங்களை பயந்தவராக காட்டக்கூடும்.

8.நம்பிக்கையோடு கூடிய புன்னகை, நீங்கள் சொல்வதை கேட்க விரும்பாதவரையும் கேட்கவைக்கும்.

9.குழந்தைகளோடு பேசும்போது, அருகில் அமர்ந்து பரிவோடு பேசவும்.

10.உங்கள் பேச்சை விளக்குவதற்கு, உங்கள் கைகளையும் பயன்படுத்தவும். சைகைகள் நீங்கள் சொல்வதை மேலும் விவரிக்கும்.

Thursday, October 10, 2013

வினோத வழக்கு

வினோத வழக்கு
**************

மார்ச் 23, 1994......ரொனால்டு ஓப்பஸின்
உடலை பிரேத பரிசோதனை செய்த டாக்டர்
தனது ரிப்போர்ட்டில் இறப்பிற்கான காரணம் அவன்
தலையில் பாய்ந்திருந்த தோட்டா என எழுதியிருந்தார்

........ஆனால் ஓப்பஸ் தற்கொலை செய்து கொள்ள
10வது மாடியிலிருந்து தற்கொலை கடிதத்தை எழுதி
்.
அவன்
விழும்போது 9வது மாடியிலிருந்து சீறிப்பாய்ந்த
தோட்டா அவனை தரை தொடும்
முன்பே சாகடித்து விட்டது.

சுட்டவனுக்கோ செத்தவனுக்கோ 8வது மாடியில்
பாதுகாப்புக்காக கட்டி வைத்திருந்த
வலை பற்றி தெரியாது.

எனவே ஓப்பஸ்
முடிவெடுத்தபடி அவன் குதித்து தன்
தற்கொலையை நிறைவேற்றியிருக்க முடியாது.

வலை அவனை காப்பாற்றியிருந்திருக்கும்.
ஓப்பஸைக் கொன்ற குண்டு 9வது மாடியின்
ஒரு போர்ஷனிலிருந்து சுடப்பட்டிருந்தது.

அந்த
போர்ஷனில் ஒரு வயதான தம்பதியினர்
வாழ்ந்து வந்தனர். வாய்த்தகராறு முற்றி கணவன்
தன்
மனைவியை நோக்கி துப்பாக்கியை நீட்டியபடி சுட்டு
போவதாக மிரட்டிக் கொண்டிருந்தான்.

ஒரு கட்டத்தில் கணவன்
மனைவியை நோக்கி துப்பாக்கி விசையை அழுத்த
குறி தப்பி ஜன்னல் வழியாக
வெளியேறி 10வது மாடியிலிருந்து விழுந்து கொண்டிர
ஓப்பஸைக் கொன்றது.

ஒருவன் 'ஏ' வைக் கொல்ல உத்தேசித்து, தவறி 'பி'
யைக் கொன்றால் அவன் மீது 'பி' யைக் கொன்ற குற்றம்
நிரூபணமாகும்.

ஆனால் அந்த வயதான
தம்பதியரோ தங்களுக்கு துப்பாக்கியில்
தோட்டா இருந்ததே தெரியாது என்று வாதிட்டனர்.

அந்தப் பெரியவர் ரொம்ப
காலமாகவே சண்டை போடும்போதெல்லாம்
துப்பாக்கியை நீட்டி மனைவியைக்
கொன்று விடுவதாக மிரட்டுவதை தன்
வாடிக்கையாகவே வைத்திருந்ததாகவும் ஒரு நாளும்
அவளைக் கொல்லும் எண்ணம்
தனக்கு இருந்ததில்லை என்றும் கூறினார்.

ஆகவே ஓப்பஸின் மரணம் ஒரு விபத்து.......த
ுப்பாக்கி யதேச்சையாக லோட் செய்யப்பட்டிருக்கிறது.
தொடர்ந்து நடந்த விசாரணையின்
போது ஒரு சாட்சி அந்த துப்பாக்கியில் குண்டுகளைப்
போட்டது அந்த தம்பதியரின் மகன் தான் என்றும் இந்த
விபத்து நடப்பதற்கு ஒரு 6 வாரங்களுக்கு முன்
அவன் துப்பாக்கியில் தோட்டாக்களை நிரப்பியதைப்
பார்த்ததாகவும் சொன்னான்.

மேற்கொண்டு நடந்த விசாரணையில் அந்த வயதான
அம்மா தன் மகனுக்கு கொடுத்து வந்த பண
உதவியை நிறுத்தியதாகவும் அதனால்
ஆத்திரமடைந்த மகன், எப்போதும் துப்பாக்கியைக்
காட்டி மிரட்டும் தன் அப்பா ஒரு நாள்
அம்மாவை சுட்டு விடுவாரென்று நம்பி துப்பாக்கியி
குண்டுகளை நிரப்பியிருக்கிறான்.

ஆகவே துப்பாக்கியின் விசையை அவன்
இழுக்கவில்லையென்றாலும்
துப்பாக்கியை கொலை செய்யும் எண்ணத்தில் லோட்
செய்திருந்ததால் மகன் தான் கொலை குற்றவாளி.

ஆகவே ரொனால்டு ஓப்பஸின் மரணத்திற்கு காரணம்
அந்த தம்பதியினரின் மகன் தான்
என்று தெள்ளத்தெளிவாக நிரூபணமானது.

இப்போது தான் கதையின் முக்கிய திருப்பம்.
தொடர்ந்து நடந்த விசாரணையில் அந்த மகன் தான்
ரொனால்டு ஓப்பஸ் என்பது தெரிய வந்தது. தன்
தாயைக் கொல்லத் துடித்த அவன் அது முடியாமல்
போகவும் ஏற்கனவே பண நெருக்கடியில் இருந்தவன்
மனம்
வெறுத்து 10வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை
முடிவெடுத்தான்.

குதிக்கும்போது 9வது மாடியிலிருந்து வெடித்த
துப்பாக்கியின் தோட்டா பாய்ந்து இறந்தான்.

எனவே அவர்களது மகன்
தன்னையே கொலை செய்து விட்டான்.... பிரேத
பரிசோதனையில் இறப்பிற்கான காரணம்
தற்கொலை என்று திருத்தி எழுதினர்.

படிச்சதும் உங்க தலை கிர்ர்ர்ருன்னு சுத்தினா நான் பொறுப்பில்லை  

ஒரு நல்ல செய்தியும், ஒரு துக்கமான செய்தியும்....

அது ஒரு மனநல மருத்துவமனை. அங்கே சிகிச்சை பெற்று வந்தார் ஒரு பட்டதாரி வாலிபர், ஒரு நாள் சக மன நோயாளி ஒருவன் கிணற்றில் குதித்திவிட, தன் உயிரை துச்சமென நினைத்து கிணற்றுக்குள் குதித்து அந்த நோயாளியை காப்பாற்றி விட்டார்.

அவரின் இந்த வீரதீரச் செயல் மருத்துவமனை முழுக்க பரவிவிட்டது.

அதைக் கேள்விப்பட்ட மருத்துவ நிபுணர் அந்த பட்டதாரி வாலிபரை அழைத்து அழைத்துச் சென்னார்..

"உனக்கு ஒரு நல்ல செய்தியும், ஒரு துக்கமான செய்தியும் சொல்லப் போகிறேன்" என்றார்.

"சொல்லுங்க டாக்டர்"

"நீ உனது நண்பனைக் காப்பாற்றியபடியால் நீ சுகமடைந்து விட்டாய் என நினைக்கிறேன். நீ வீடு செல்லலாம். இது நல்ல செய்தி"

"துக்கமான செய்தி நீ கிணற்றில் இருந்து காப்பாற்றிய உனது நண்பன் தூக்கிட்டுத் தற்கொலை செய்துவிட்டான்"

அப்போது இடைமறித்த பட்டதாரி வாலிபர் சொன்னார்,

"டாக்டர் ... அந்த நோயாளி சாகவில்லை. கிணறில் விழுந்து நனைந்தவனை ஈரம் காயட்டும் என்று நான் தான் அவனது கழுத்தில் கயிற்றினைக் கட்டி மரத்தில் தொங்க விட்டிருக்கிறேன். ஈரம் காய்ந்ததும் அவன் சுகமாகிவிடுவான்". 

நம்ம நாராயணசாமி....

ஒரு நாள் நம்ம நாராயணசாமி, சின்னதா ஒரு டிவி வாங்கனும்ன்னு ஆசை பட்டு, எலக்ட்ரானிக்ஸ் கடைக்கு போயிருக்கார். கடைகாரனைப் கூப்பிட்டு ஒரு சின்ன டிவியை காண்பிச்சு கேட்டார்.

"இந்த டிவி என்ன விலை?"

கடைகாரன் நாராயணசாமியை ஏற இறங்க பார்த்துட்டு சொன்னான்

"இந்த கடையில நாராயணசாமிக்கெல்லாம் டிவி விக்கறதில்லை..."

எப்படியும் இந்த டிவியை வாங்கிடனும்னு, விட்டுக்கு போய் தன்னோட கெட்அப்பை மாதிக்கிட்டு வந்து ‌கடைகாரனைப் பார்த்து கேட்டார்,

"இந்த டிவி என்ன விலை?"

"இந்த கடையில நாராயணசாமியைக்கெல்லாம் டிவி விக்கறதில்லை..." ம‌றுப‌டியும் அதையே க‌டைகார‌ன் சொல்ல‌, டென்ஷனான நாராயணசாமியைக்கு என்ன செய்றதுன்னு தெரியலை.

ந‌ம்ம திருட்டு முழி தான் இவனுக்கு காட்டிகுடுக்குதுன்னு நினைச்சு, அடுத்த முறை போகும் போது, கூலிங்கிளாஸ் போட்டுக்கிட்டு, ஒட்டு மொத்த கெட்அப்பும் மாத்திக்கிட்டு கடைக்கு போய் கேட்டார்,

"இந்த டிவி என்ன விலை?"

"ஒரு தடவை சொன்னா புரியாது? இந்த கடையில நாராயணசாமிக்கெல்லாம் டிவி விக்கறதில்லை..."

நாராயணசாமினால‌் பொறுக்க‌ முடிய‌லை, கடைகாரன்கிட்ட பரிதாபமா கேட்டார்,

"டிவி குடுக்க‌லைன்னா ப‌ர‌வாயில்லை, அட்லீஸ்ட், நான் நாராயணசாமி தான்னு எப்ப‌டி க‌ண்டுபிடிச்சே சொல்லு?"

கடைகாரன் சிரிச்சிக்கிட்டே சொன்னான், "இது டிவி இல்லை, மைக்ரோஓவ‌ன் அதான்" 

Monday, October 7, 2013

உயிர் போற நேரத்துல கூட!


“இந்த பஸ்ல எத்தனை வருஷமா நீங்க கண்டக்டரா இருக்கீங்க?”

“ஐந்து வருஷமா இருக்கேங்க!”

“நானும் பலகாலமா இந்த பஸ்ல பயணம் பண்ணிக்கிட்டிருக்கேன். எவ்ளோ நெருக்கடியான நேரங்களில் கூட பதட்டப்படாம, சிரிச்ச முகத்தோட
பயணிகள் கிட்ட நடந்துக்கிற உங்கள மாதிரி கண்டக்டரை பார்த்ததே இல்லை”

“தொழில்ல எவ்வளவு டென்ஷன் இருந்தாலும், மனசை லேசா வச்சிக்கணும் சார். அமெரிக்காவுல உள்ள ‘நியூரோசைக்யட்ரிக்’ நிபுணர்கள் என்ன சொல்றாங்க தெரியுமா?”

“என்ன சார் சொல்றாங்க?”

“மனுஷன் புன்னகைக்கும் போது, சிரிக்கும் போது, மகிழ்ச்சிகரமா இருக்கும் போது உடம்புல ஒருவித அலைகளை உண்டாக்கி, நியூரோ பெப்டைடுகளை உண்டாக்குமாம். இது உடம்புல நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இப்படிப்பட்டவங்க தான் அதிக நாள்
ஆரோக்கியமா வாழுறாங்களாம்.

அதுமட்டுமில்ல…பொறாமை, ஆசை, கோபம் எல்லாத்தையும் கட்டுப்படுத்தினா, ஆயுள் இன்னும் கூடும்னு ஆய்வுகள் சொல்லுது. உயிர் போற நேரத்துல கூட பதட்டப்படக் கூடாது சார்”

“அடேங்கப்பா…இவ்ளோ தெரிஞ்சி வச்சிருக்கறதால தான் நீங்க எப்பவும் பதட்டப்படாம சிரிச்ச முகத்தோட வேலை செய்யிறீங்க போல!”

“ஆமாங்க!”

“ஆனா உங்க கிட்ட இருக்குற இந்த நிதானம் உங்க டிரைவர் கிட்ட இல்லைன்னு நினைக்கிறேன்”

“ஏன் அப்படி சொல்றீங்க?”

“இப்ப இந்த பஸ் எப்படி போய்க்கிட்டு இருக்குன்னு பாருங்களேன். தாறுமாறா தறிகெட்டு ஓடுற மாதிரி தெரியுது. நீங்களாவது முன் பக்கம் போய் பிரேக்-கிரேக் கழண்டு விழுந்துடுச்சான்னு பாத்துட்டு வாங்களேன், ப்ளீஸ்!”

“கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி அங்கே போய் பாத்துட்டு வந்து தான் உங்ககிட்ட பேசிக்கிட்டிருக்கேன். வர்ற வழியில தான் எங்கயோ விழுந்திருக்கணும்னு நினைக்கிறேன்!”

“எது…பிரேக்கா?”

“இல்ல…டிரைவர்!” 

Thursday, October 3, 2013

வடிவேலுவின் மூட்டைப் பூச்சி மிஷின் லண்டனில் அமோக விற்பனை..

செப்டம்பர் 20, 2013 அன்று, இங்கிலாந்தைச் சேர்ந்த நீதிமன்றம் ஒன்று போலியான வெடிகுண்டு கண்டறியும் கருவியை பல்வேறு நாடுகளின் பாதுகாப்புத் துறைகளுக்கு விறபனை செய்த குளோபல் டெக்னிக்கல் எனும் தனியார் நிறுவனத்தின் அதிபர் கேரி போல்டனுக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்துள்ளது. இந்த போலியான கருவிகளை பாதுகாப்புத் துறையின் எச்சரிக்கையையும் மீறி, இங்கிலாந்து அரசின் மூன்று முக்கிய துறைகளே ஊக்குவித்துள்ளன என்பது தான் இந்த மோசடியின் உச்சம்.
கேரி போல்டன்
கேரி போல்டன் – டுபாக்கூர் குண்டு கண்டறியும் கருவி
உலகின் பல்வேறு நாடுகளும் பயத்தின் காரணமாக பல்வேறு போர்க் கருவிகள், ஆயுதங்கள், பாதுகாப்பு கருவிகளை வாங்கிக் குவிக்கின்றன. முதலாளித்துவ நாடுகளில் உள்ள முதலாளிகள் இந்த சந்தையை அரசுகளின் உதவியுடன் ஆக்கிரமித்துள்ளனர். இதற்காக மக்கள் மத்தியில் பயத்தை ஏற்படுத்தவும் அவர்கள் தயங்குவதில்லை. 1997-ல் இத்தகைய சந்தையை குறி வைத்து கேரி போல்டன் பாதுகாப்பு கருவிகளைத் தயாரிக்கும் குளோபல் டெக்னிகல் எனும் நிறுவனத்தை ஆரம்பிக்கிறார்.
கோல்ஃப் விளையாடும் போது காணாமல் போகும் பந்துகளை கண்டுபிடிக்க உதவும் கருவியைக் காட்டி இதை வைத்து மறைத்து வைத்துள்ள வெடிகுண்டுகள் மற்றும் போதை பொருட்களை கண்டறியலாம் என்று சந்தைப் படுத்துகிறார். இங்கிலாந்து அரசின் முக்கிய துறைகளான ராணுவ அமைச்சகம், வெளியுறவு மற்றும் காமன்வெல்த் அலுவலகம், வர்த்தகம் மற்றும் தொழில்துறை, என மூன்று துறைகளும் போட்டி போட்டுக் கொண்டு குளோபல் டெக்னிகல் நிறுவனத்தை ஊக்குவித்துள்ளன.
ஒரு ப்ளாஸ்டிக் கைப்பிடி, ஒரு ஏரியல், ஒரு ஆன்டெனாவை கொண்டிருக்கும் இந்த சாதாரண கருவியை தயாரிக்க 1.83 பவுண்டுகள் (183 ரூபாய்) செலவாகும். வெறும் 183 ரூபாய்க்கு உற்பத்தி செய்த இந்த டுபாக்கூர் கருவியை பல்வேறு நாடுகளுக்கும் 15,000 பவுண்டுகள் (சுமார் 15 லட்சம் ரூபாய்) விலைக்கு விற்றிருக்கிறது க்ளோபல் டெக்னிகல் நிறுவனம். இந்த கருவியை பல்வேறு நாடுகள் தங்கள் பாதுகாப்புத் துறைக்கு வாங்கிக் குவித்துள்ளன. அந்த ஏமாளிகள் பட்டியலில் இந்தியாவும் உண்டு. அதே போல பாகிஸ்தான், எகிப்து, தாய்லாந்து, மெக்சிகோ போனற நாடுகளும் இதை வாங்கி ஏமாந்துள்ளன. குளோபல் டெக்னிகல் ஆண்டுக்கு 30 லட்சம் பவுண்டுகள் (சுமார் ரூ 30 கோடி) மதிப்பிலான கருவிகளை விற்பனை செய்திருக்கிறது.
தாய்லாந்தில் இந்தக் கருவியை உபயோகித்த போது போலியான கருவியின் தவறான சிக்னல்களால் பல அப்பாவிகள் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டனர். மனித உரிமை ஆர்வலர்களின் தொடர் போரட்டங்களால் இந்த போலிக் கருவி அம்பலத்திற்கு வந்தது.
2001-ல் இந்த கருவிகளை சோதனை செய்த பிரிட்டிஷ் உள்துறை அமைச்சகத்தின் நிபுணர் இந்தக் கருவியின் செயல்பாடுகள் மீது சந்தேகம் தெரிவித்தார். சுமார் 30 சதவீதம் தான் இந்தக் கருவி செயல்படுவதாக சோதனையின் முடிவில் தெரிவித்தார். இந்தக் கருவியை அனுமதிக்க முடியாது என்று எச்சரிக்கும் ஓர் சுற்றறிக்கையை ராணுவம், பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் காவல் துறையின் 1000 அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்தார்.
ஆனால் அந்த சுற்றறிக்கையை புறம் தள்ளிவிட்டு, ராணுவ பொறியாளர்கள் குழு இந்த போலியான கருவியை பல்வேறு நாடுகளில் நடைபெற்ற ஆயுத கண்காட்சிகள், மற்றும் சிறப்பு விற்பனை கண்காட்சிகளில் வைக்க க்ளோபல் டெக்னிகல் நிறுவனத்திற்கு முழு உதவியையும் செய்துள்ளது.
இங்கிலாந்து அரசின் வர்த்தகம் மற்றும் தொழில் துறை தன் சொந்த செலவில் பல கண்காட்சிகளுக்கு குளோபல் டெக்னிக்கல் நிறுவனத்தை அழைத்துச் சென்றுள்ளது. மெக்சிகோ நாட்டில் உள்ள இங்கிலாந்து தூதரகத்தில் குளோபல் டெக்னிக்கல் நிறுவனத்தின் பல வர்த்தக சந்தைப்படுத்தும் நிகழ்வுகள் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
                         போலி வெடிகுண்டு கண்டறியும் கருவி
போலி வெடிகுண்டு கண்டறியும் கருவி
1999-ம் ஆண்டு கேரி போல்டன் தன் போலியான கருவியை ராணுவ பாதுகாப்பு கருவிகள் சோதனை செய்யும் துறையிடம் 500 பவுண்டுகள் கட்டி சோதனை செய்யக் கோரியிருக்கிறார். இப்போழுது விற்பனை செய்யப்பட்டுள்ள ஜிடி 200 எனும் கருவியின் முன்னோடியான மோல் எனும் கருவியை தான் அவர் சோதனை செய்யக் கோரினார். சோதனை முடிவுகள் கருவியை அடாசு என்றன. ஆனால் போல்டன் அந்த சோதனை அறிக்கையை திருத்தி இந்த கருவியை சந்தைப்படுத்தியுள்ளார்.
இந்த வழக்கு விசாரணையின் போது இங்கிலாந்து அரசின் வர்த்தகம் மற்றும் தொழில் துறை குளோபல் டெக்னிகல் நிறுவனத்திற்கு ஆதரவளித்ததை ஒப்புக்கொண்டுள்ளது. பெரும் சர்ச்சையையும் இங்கிலாந்து நாட்டிற்கு அவமானத்தையும் கொடுத்திருக்கும் இந்த செயல் நாடாளுமன்றத்திலும் கடுமையான விவாதத்தை கிளப்பியுள்ளது.
ஒரு தனியார் நிறுவனம் லாபமீட்ட மக்கள் வரிப் பணத்தை ஏன் வீணடிக்க வேண்டும் என்ற கேள்விக்கு விடை இல்லை. மறுபுறம் இந்த போலிக் கருவிகளை வாங்கிய இந்தியா மாதிரியான நாடுகளின் நிலை வெட்கக் கேடானது என்றால், இந்த கருவியினால் பாதிக்கப்பட்ட அப்பாவிகளின் நிலை சோகமானது. இத்தகைய டுபாக்கூர் கருவிகளை வைத்துக் கொண்டு தான் நம் நாட்டு ராணுவமும் போலீசும் வெடிகுண்டு சோதனைகளை நடத்தி தீவிரவாதிகளை பிடித்திருக்கின்றன என்றால் அவர்கள் அனைவரும் குற்றவாளிகளாக இருக்க முடியாது. போலிக் கருவிகளைக் கொண்டு போலி தீவிரவாதிகளை தான் பிடிக்க முடியும், அதாவது நிரபராதிகளை.
வடிவேலு மூட்டைப் பூச்சி ஒழிப்பு மிஷனை விற்பனை செய்த போது வயிறு குலுங்கிச் சிரித்தவர்கள் அதே மெஷினை குண்டு கண்டுபிடிப்பதற்கும் பயன்படுத்திய இங்கிலாந்து முதலாளிகளை நினைத்து என்ன சொல்கிறீர்கள்?
பார்க்க

Wednesday, October 2, 2013

துறவிகிட்ட சாப்ட்வேர் இன்ஜினியர் வந்தார்



ஒரு துறவிகிட்ட சாப்ட்வேர் இன்ஜினியர்
வந்தார்.. நல்ல தெய்வ பக்தி,அறிவாளி.
ஆனா அவருக்கு ரொம்ப
நாளா ஒரு சந்தேகம். அதாவது இந்த
பூமியில பிறந்துட்டோம். ஒரு நாள் இந்த
உலகத்தை விட்டு போகத்தான் போறோம்.
அப்படி இருக்கும்போது ஏன் நாம
நல்லது மட்டும் தான் செய்யணும்.
கெட்டது செஞ்சா, அடுத்தபிறவியில
அனுபவிக்கணும்.
அதாவது கர்மாவிடாதுன்னு
எல்லா பெரியவங்களும் சொல்றாங்க.
ஆனா எனக்கு அதுல உடன்பாடு இல்லை.
எல்லாம் சுத்த பொய். அது எப்படி நாம
செத்துபோய்ட்டா கர்மா நம்ம
கூடவே வருதும்னு அவருக்கு சந்தேகம்.
அவருடைய சந்தேகத்தை துறவிகிட்ட
சொன்னார்..துறவி கேட்டார்.
உனக்கு ஒரு வேலை கொடுக்கிறேன்.
அதை செய்வாயா?
கண்டிப்பா செய்யறேன். ஒகே.. நீ
இன்னையிலிருந்து
ஒரு பத்து நாளைக்கு நீ
ஏதாவது ஹாஸ்பிடலுக்கு போய்ட்டு வ
பத்து நாள் கழிச்சு நீ இங்க
வான்னார்..அதுக்கு நா இன்ஜினியர்..
நான் டாக்டர் இல்லை. அதுக்கு அந்த
துறவி எனக்குத்தெரியும
்..சந்தோஷமா போய்ட்டுவா..
இவரும் பத்து நாட்கள் கழித்து வந்தார்.
அப்ப அந்த
துறவி எப்படி இருந்தது என்றார்.
அதற்கு அந்த இன்ஜினியர், நான் கேன்சர்
ஹாஸ்பிடலுக்கும், இருதயம்
அறுவை சிகிச்சை ஹாஸ்பிடலுக்கும்
போனேன்.
அதற்கு அந்த துறவி கேட்டார். கேன்சர்
ஹாஸ்பிடலுக்கு போன, அதைப்
பத்தி என்ன சொல்ற. இன்ஜினியர்,
சிலருக்கு சாப்பாட்டினால,
அல்லது பரம்பரைல
யாருக்காவது கேன்சர் இருந்ததால
வந்திருக்கு.அதேபோலத்தான் ஹார்ட்
ப்ராப்ளமும். சில
வியாதி பரம்பரையா ஜீன்ல
இருக்கு.அதனால
சிலருக்கு வந்திருக்கு. நல்ல
வேளை எனக்கு அதெல்லாம் இல்லை.
என்ன சுகர் மட்டும் தான்.
அதுக்கு துறவி,உனக்கு மட்டும் தான்
சுகரா..இல்லை உங்க குடும்பத்தில
யாருக்காவது இருக்கா? அந்த
இன்ஜினியர்,எங்க பரம்பரையில நிறைய
பேருக்கு இருக்கு. ஜீன்ல
யாருக்காவது இருக்கும் போல.அதான
எனக்கும் இருக்கு
அப்ப அந்த துறவி சொன்னாரம்.
ஒரு டாக்டர் சில சமயம், சில
வியாதிகளைப்பற்ற
ி பரம்பரை வியாதி,அல்லது ஜீன்ல
இருக்கு என்று சொல்லும்போது, டாக்டர்
சொல்றதை நம்புறீங்க.நீங்க
ஆராய்ச்சி பண்ணல, அதுபோலத்தான் இந்த
கர்மாவும். நீங்க அறிவியல்
பூர்வமா யாராவது சொன்னா நம்புறீங்க.
அதுபோலத்தான் இதுவும் ஒரு ஆன்மீக
அறிவியல். நம்ம முன்னோர்கள் டாக்டர்
சொல்றாப்ல சொல்லி இருக்காங்க.
உனக்கு சுகர்
பரம்பரையா வந்தது.அதுபோலத்தான்
கர்மாவும். உன்னுடைய கர்மா மனம் என்ற
ஆன்மீக ஜீனில் இருக்கு.
நல்லது செஞ்சா,நல்லது வரும்.
மற்றவர்களுக்கு தீமை செஞ்சா நம்
கர்மா பரம்பரையா வர்ற
வியாதி மாதிரி ஜென்ம
ஜென்மா வரும். இதுதான்
ஜீன் ஜென்(மா) தத்துவம் என்றார்.
”நல்லதையே செய்வோம்.
நல்லதே நடக்கும்.”