Wednesday, December 11, 2013

ரொம்ப நாள் சந்தேகம்............

ஒரு பையனுக்கு ரொம்ப நாளா சந்தேகம்.

முதல் மனுசன் எப்படி வந்தான்? அப்படின்னு.

அவன் அவனோட அப்பா கிட்டே போய், அப்பா, முதல் மனுசன் எப்படி தோணினான். அப்படின்னு கேட்டான்.

அதுக்கு அவர் சொல்றாரு, நாமெல்லாம் ஆதாம் ஏவாள் மூலமா உலகுக்கு வந்தவங்க. அப்படின்னு பதில் சொல்றார்.

இருந்தாலும் பையனுக்கு குழப்பம் இன்னும் தீரலை.
அவனோட அம்மா கிட்டே போய் கேட்குறான்.

அதுக்கு அவங்க சொல்றாங்க, நாமெல்லாம் குரங்கிலிருந்து வந்தவங்க அப்படின்னு.

இப்போ இன்னும் குழப்பமாயிடுச்சி பையனுக்கு. ரொம்ப யோசனையா உட்கார்ந்து இருக்கான்.

அதை பார்த்து அவங்க அப்பா, என்னடா சந்தேகம் இன்னும் தீரலையான்னு கேட்குறார்.

அந்த பையன் அவங்க அம்மா சொன்னதை சொல்றான்.

அப்பா உடனே சொல்றாரு, ரெண்டுமே கரெக்ட் தான்டா. நான் எங்க வம்சாவளியை சொன்னேன். உங்கம்மா அவ வம்சாவளியை சொல்லி இருக்கா அப்படின்னு.

பையன் இப்போ ரொம்ப தெளிவாயிட்டான்.

அப்பாவை
கேட்டான், என்னப்பா இன்னைக்கு சாப்பாடு உங்களுக்கு வெளியிலையா..


:D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D