Wednesday, June 3, 2015

கீரைகளும் அதன் பலன்களும்

அகத்திக்கீரை- ரத்தத்தை சுத்தமாக்கி பித்தத்தை தெளியவைக்கும். 

காசினிக்கீரை- சிறுநீரகத்தை நன்கு செயல்பட வைக்கும். உடல் வெப்பத்தை தணிக்கும். 

சிறுபசலைக்கீரை- சருமநோய்களைத் தீர்க்கும் பால்வினை நோயை குணமாக்கும். 

பசலைக்கீரை- தசைகளை பலமடையச் செய்யும். 

கொடிபசலைக்கீரை- வெள்ளை விலக்கும் நீர் கடுப்பை நீக்கும். 

மஞ்சள் கரிசலை- கல்லீரலை பலமாக்கும், காமாலையை விலக்கும். 

குப்பைகீரை- பசியைத்தூண்டும்.வீக்கம் வத்தவைக்கும். 

அரைக்கீரை- ஆண்மையை பெருக்கும். 

புளியங்கீரை- சோகையை விலக்கும், கண்நோய் சரியாக்கும். 

பிண்ணாருக்குகீரை- வெட்டையை, நீர்கடுப்பை நீக்கும். 

பரட்டைக்கீரை- பித்தம், கபம் போன்ற நோய்களை விலக்கும். 

பொன்னாங்கன்னி கீரை- உடல் அழகையும், கண்ஒளியையும் அதிகரிக்கும். 

சுக்கா கீரை- ரத்த அழுத்தத்தை சீர்செய்யும், சிரங்கு மூலத்தை போக்கும். 

வெள்ளை கரிசலைக்கீரை- ரத்தசோகையை நீக்கும். 

முருங்கைக்கீரை- நீரிழிவை நீக்கும், கண்கள், உடல் பலம்பெறும். 

வல்லாரை கீரை- மூளைக்கு பலம் தரும். 

முடக்கத்தான்கீரை- கை, கால் முடக்கம் நீக்கும் வாயு விலகும். 

புண்ணக்கீரை- சிரங்கும், சீதளமும் விலக்கும். 

புதினாக்கீரை- ரத்தத்தை சுத்தம் செய்யும், அஜீரணத்தை போக்கும்.

நஞ்சுமுண்டான் கீரை- விஷம் முறிக்கும். 

தும்பைகீரை- அசதி, சோம்பல் நீக்கும். 

கல்யாண முரங்கைகீரை- சளி, இருமலை துளைத்தெரியும். 

முள்ளங்கிகீரை- நீரடைப்பு நீக்கும். 

பருப்புகீரை- பித்தம் விலக்கும், உடல் சூட்டை தணிக்கும். 

புளிச்சகீரை- கல்லீரலை பலமாக்கும், மாலைக்கண் நோயை விலக்கும், ஆண்மை பலம் தரும். 

மணலிக்கீரை- வாதத்தை விலக்கும், கபத்தை கரைக்கும். 

மணத்தக்காளி கீரை- வாய் மற்றும் வயிற்றுப்புண் குணமாக்கும், தேமல் போக்கும். 

முளைக்கீரை- பசியை ஏற்படுத்தும், நரம்பு பலமடையும். 

சக்கரவர்த்தி கீரை- தாது விருத்தியாகும். 

வெந்தயக்கீரை- மலச்சிக்கலை நீக்கும், மண்ணீரல், கல்லீரலை பலமாக்கும். வாத, காச நோய்களை விலக்கும். 

தூதுவலை- ஆண்மை தரும். சருமநோயை விலக்கும். சளித்தொல்லை நீக்கும். 

தவசிக்கீரை- இருமலை போக்கும். 

சாணக்கீரை- காயம் ஆற்றும்.

வெள்ளைக்கீரை- தாய்பாலை பெருக்கும். 

விழுதிக்கீரை- பசியைத்தூண்டும். 

கொடிகாசினிகீரை
- பித்தம் தணிக்கும்.

துயிளிக்கீரை- வெள்ளை வெட்டை விலக்கும். 

துத்திக்கீரை- வாய், வயிற்றுப்புண் அகற்றும். வெள்ளை மூலம் விலக்கும். 

காரகொட்டிக்கீரை- மூலநோயை போக்கும். சீதபேதியை நிறுத்தும். 

மூக்கு தட்டைகீரை- சளியை அகற்றும். 

நருதாளிகீரை- ஆண்மையைப் பெருக்கும், வாய்ப்புண் அகற்றும்