கோழிப்பண்ணை வச்சார்நம்ம ஆளு
முதல்ல 100 கோழிக்குஞ்சுகளோட ஆரம்பிச்சநம்ம ஆளு
விரைவிலேயே இன்னொரு 100 குஞ்சுகளுக்கு ஆர்டர் குடுத்தாரு..!
அடுத்த மாசமே இன்னொரு 100 வாங்கினாரு!
சப்ளை பண்றவர்: என்ன சார் .? வியாபாரம் எகிறுது போலருக்கு…?
நம்ம ஆளு : எங்கே..? எல்லா குஞ்சும் செத்து செத்து போகுது…!
சப்ளை பண்றவர்: என்னது..? செத்துடிச்சா..? தண்ணியெல்லாம் காமிச்சியா…?
நம்ம ஆளு அதெல்லாம் சரியாதான் செஞ்சேன்! மண்ணு தான் சரியில்லேன்னு நெனைக்கிறேன்…!
சப்ளை பண்றவர்: என்னது? மண்ணா..?
நம்ம ஆளு ஆமாம்.. ரெண்டு அடி ஆழத்துல பொதைச்சாலும் கோழி முளைக்க மாட்டேங்குது…!
அரை அடி ஆழத்துல பொதைச்சாலும் முளைக்க மாட்டேங்குது…!
சப்ளை பண்றவர்: தலைசுத்தி விழுந்தான்!
ஏன்னா…, நம்ம ஆளு முதலில் வச்சிருந்து விவசாயப் பண்ணை!