Wednesday, September 25, 2013

புதுசா ஒரு யமஹா பைக்...



நம்மாளு ஒருத்தன் புதுசா ஒரு யமஹா பைக்
வாங்கி டெலிவரி எடுத்துகிட்டு ரோட்டுல வந்தான்,

அப்ப ரோட்டுல ஒரு பெரிய பணக்காரரு தன்னோட
பெர்ராரி காருல போய்கிட்டு இருந்தாரு...

அவருக்கு இணையா காருகிட்ட வந்தவன்,

"முன்ன பின்ன யமஹா ஓட்டியிருக்கிங்களா?"அப்படின்னு
கேட்டான்.

அவரு நெனச்சாரு,

"என்னடா நாம பெர்ராரில போறோம்,இவன் இப்படி கேக்குரானே" அப்படின்னு பதில் சொல்லாம வேகமா போயிட்டாரு..

நம்மாளு விடாம வேகமா துரத்தி போய் மறுபடியும்

"முன்ன பின்ன யமஹா ஓட்டியிருக்கிங்களா?"அப்படின்னு
கேட்டான்.

அவரு இது என்னடா லூசு அப்படின்னு பதில் சொல்லாம
வேகத்த கொறச்சிகிட்டாறு...

ஆனா நம்மாளு அதே வேகத்துலமுன்னாடி போய்ட்டான்...

ஒரு 10 நிமிஷம் கழிச்சி பெர்ராரில போனவரு ஒரு எடத்துல ரோட்டோரம் கூட்டாமா மக்கள் நிக்கிறத பார்த்து ஒரு
ஆர்வத்துல வண்டிய ஓரம் கட்டிட்டு வந்து பார்த்தாரு..

பார்த்தா நம்ம யமஹா பைக்வந்தவன் விழுந்து வாரிகிட்டு நொறுங்கிபோய் கிடந்தான்..

அவ்வளவு சேதாரத்துலயும் காருக்காரர அடையாளம் பார்த்து சொன்னான்,

"நான் தான் "முன்னபின்ன யமஹா ஓட்டியிருக்கிங்களா அப்படின்னு கேட்டானே.. தெரியும்னு ஒரு வார்த்தை சொல்லி இருந்தா அதுல ப்ரேக்கு எங்க இருக்குன்னு கேட்டு அத பயன்படுத்தி வண்டிய நிறுத்தி இருப்பேன்..இவ்வளவு அடி பட்டுருக்காதே"