Friday, September 27, 2013

அரை உசிரு போற மாதிரி என்னை நல்ல அடி

கணவனும்,மனைவியும் பிரிகிறார்கள்.கணவனுக்கு மனைவி மேல் எக்கச்சக்க கோபம்,அவனுக்குத் திடீரென ஒரு அற்புத விளக்கு கிடைக்கிறது.அந்த விளக்கிலிருந்து வெளியே வரும் பூதம் மூன்று வரம் தருவதாக சொல்கிறது

ஆனால் அப்படி அவனுக்கு கிடைக்கிற ஒவ்வொரு வரமும், அவனது மனைவிக்கு இரு மடங்ககக்கிடைக்கும் என்றும் சொல்கிறது.

"ஹவாய் தீவுல எனக்கொரு வீடு வேனும்"என முதல் வரம் கேட்கிறான் கணவன்,அப்படியே அவனுக்கு ஒரு வீடும் அவனது மனைவிக்கு இரண்டு வீடுகளும் கொடுக்கிறது பூதம்.

அடுத்து இரண்டு கோடி பணம் கேட்கிறான். அவனது மனைவிக்கு 4 கோடி கிடைக்கிறது

."மூணாவது வரம் கேள், நல்லா கேட்டுக்கோ,உனக்கு கிடைக்கிற எதுவானாலும் உன் மனைவிக்கு அதே மாதிரி ரெண்டு மடங்கா கிடைக்கும்" என்கிறது பூதம்.

"தெரியும்,தெரியும் அரை உசிரு போற மாதிரி என்னை நல்ல அடி" என்று மூன்றாவது வரத்தை முன்வைக்கிறான் கணவன்.